districts

img

ஜப்பான் ரோபோடிக்ஸ் போட்டியில் அசத்திய கோவை மாணவர்கள்!

கோவை, செப்.15- தேசிய பேரிடர் மீட்புக்குழு வுக்கு உதவும் வண்ணம் நீருக்கடி யிலும் சென்று பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகிய மக்களை கண்டறியும் ஏஐ தொழில் நுட்பத்து டன் கூடிய நீர்முழ்கி ரோபோவை கண்டுபிடித்து ஜப்பானில் நடை பெற்ற சர்வதேச ரோபோடிக்ஸ் போட்டியில் காட்சி படுத்தி முதல் பரிசை வென்று கோவை கலைஞர் கருணாநிதி கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் கண் ணம்பாளையத்தில் செயல்பட்டு  வரும் கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கல்லூரியில் ரோபோட் டிக்ஸ் ஆய்வகம் செயல்பட்டு வரு கிறது. இங்கு மாணவர்கள் கல்வி  கற்றதற்கு பின்னால் தொழில் முறை பயிற்சிகளையும் புதிய  கண்டுபிடிப்புகளை மேற்கொள் ளும் வண்ணம் கல்லூரி துணைத்  தலைவர் இந்து முருகேசன் ரோபோட் டிக்ஸ் ஆய்வகத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்த ஆய்வகத்தில் இக் கல்லூரியில் படிக்கும் பொறியி யல் மாணவ, மாணவிகள் கிலசன், அபினேஷ், கனிஷ்கா, தயாளன் உள் ளிட்ட எட்டு பேர் ஒன்றிணைந்து ஆழ் கடலில் நீரில் மூழ்கி உள்ளே ஏற்பட் டிருக்கும் விபத்துகளோ, பேரிடர் களையோ மக்கள் சிக்கியுள்ள தையோ கண்டறியும் ரோபோட் ஒன்றை தயாரித்து உள்ளனர்.  சோனார் இமாஜிக், மற்றும் ஏஐ அல்காரிதம் 3டி பிரிண்டிங், நீர்முழ்கி கேமரா சென்சார் போன்ற நவீன செயல்முறைகளை பயன்படுத்தி மாணவர்கள் இந்த ரோபோட்டை உருவாக்கியுள்ளனர். பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்கிக்  கொள்ளும் நபர்களை மீட்பது  பெரிய அளவில் உள்ள டேம்களின் தண்ணீர் இருப்பவை கண்டறிவது உள்ளே ஏற்பட்டிருக்கும் இயந்திர கோளாறுகளை கண்டறிவது ஆகி யவற்றை எளிதாக்கும் முறையில் இந்த ரோபோட்டானது வடிவமைக் கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை லட் சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த  ரோபோட் வடிவமைக்கப்பட்டுள் ளது. இதனை ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் நடை பெற்ற ரோபோடிக்ஸ் போட்டியில்  கலந்து கொண்ட இந்த மாணவர்கள்  அதனை செயல்படுத்தி காட்டியுள் ளனர். இதனை அங்கீகரித்து இந்த போட்டியில் முதல் பரிசு கலைஞர் கருணாநிதி கல்லூரி மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மனித குலத்தின் நலனுக்காக புதுமை, தொழில்நுட்ப சிறப்பை  மேம்படுத்த இந்த கண்டுபிடிப்பு உத வும் எனவும் பாராட்டியுள்ளனர். இப் போட்டியில் வெற்றி பெற்ற மாண வர்களை கல்லூரி நிறுவனத் தலை வர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் துணைத் தலைவர் இந்து  முருகேசன், அறிவுமணி இராவ ணன் பேராசிரியர் ஆகியோரும் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து பேசிய கல்லூரி  மாணவர்கள், கல்லூரி நிர்வாகத் தின் ஊக்குவிப்பு காரணமாக இது போன்ற கண்டுபிடிப்புகளை செய் வதற்கு உறுதுணையாக இருந்தது. இந்த தொழில்நுட்பத்தை இந்திய பேரிடர் மீட்பு குழுவின் தலைமை  கமாண்டண்ட் இந்த தொழில் நுட்பத் திற்கு பெரும் பாராட்டுகளை கொடுத் துள்ளார். சிறிய வடிவிலாக தயா ரிக்கப்பட்ட இந்த ரோபோ பெரிய பொருள் செலவில் செய்யும் பொழுது இன்னும் உபயோகமாக இருக்கும். இதனை செய்வதற்கான முயற்சியை முன்னெடுக்க இருப் பதாகவும் தெரிவித்துள்ளனர்.