districts

img

அமராவதி சர்க்கரை ஆலையில் 10 சதவிகித பிழிதிறன் இலக்கு நிர்ணயம்

உடுமலை, ஏப்.8- அமராவதி சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு 10 சதவிகிதம் பிழிதிறன் இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. மடத்துக்குளம் தாலுகா, கிருஷ்ணாபுரத்தில் தமிழ் நாடு அரசின் சார்பில் 1960  ஆம் ஆண்டு முதல் முறை யாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை சுமார் 1250  டன் அறவை திறன் கொண்ட ஆலை துவக்கப் பட்டது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் நல்ல லாபத்தில் இயக்கி வந்த ஆலையில், இயந்திரத்தில் புதுமைகளை கொண்டு வர மால் பழைய இயந்திரங்களை கொண்டு  இயக்குவதால் தற்பொழுது தொழிலாளர் களுக்கும் விவசாயிகளுக்கும் பணம் தர முடியாத நிலையில் இயக்கி வருகிறது.  இந்நிலையில், நாளை (10 ஆம் தேதி) நடப்பு ஆண்டு ஆலையில் அரவையை மேற் கொள்ள ஆலையில் இளஞ்சூடு ஏற்றும்  விழா நடைபெறுகிறது. பின்னர், நிர்வா கத்தின் சார்பில் விவசாயிகள் ஆலோச னைக்கூட்டம் நடைபெறும். இதுகுறித்து,  தமிழ்நாடு விவசாய சங்கத் தின் செயலாளர் பாலதண்டபாணி தெரிவிக் கையில், ஆலையில் கடந்த அறுபது வருடங் களாக ஆலையில் இருக்கும் இயந்திரங் களை புதுமை செய்யப்படாமல் உள்ளது. இத னால், கடந்தாண்டு இயந்திரங்கள் பழுது  ஏற்பட்ட  ஆலையின் மொத்த பிழி திறன்  7.8 சதவிகிதமாக குறைந்தது. இந்த  ஆலையில் தான் முன்பு 10 சதவிகிதம் பிழி  திறன் இருந்தது கடந்த வருடம் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யும் வகையில் உடனடி யாக ஆலையில் பராமரிப்பு பணிகளை துவங்க வேண்டும். விளைநிலங்களில் கரும்புகளை வெட்ட சம அளவு கூலியை ஆலை நிர்வாகம் செய்ய வேண்டும் என் றார்.