திருப்பூர், ஜூன் 22 – திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டு றவு சர்க்கரை ஆலை மட்ட கரும்பு விவசா யிகள் சங்கக் கமிட்டி வியாழனன்று அமைக் கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலையை பாதுகாக்கக் கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பின்பு, அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகள் பேரவைக் கூட் டம் நடைபெற்றது. இதில் அம ராவதி சர்க்கரை ஆலை மட்ட கரும்பு விவசாயிகள் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர். குமார் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஆலை மட்ட கமிட்டி தலைவர்: அ. பாலதண்டபாணி, செயலாளர்: எம்.எம்.வீரப் பன், பொருளாளர்: ஜி.கணேசன், துணைத் தலைவர்: வடிவேல், துணை செயலாளர்: பால்ராஜ் உட்பட 15 கரும்பு விவசாயிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.