districts

img

அமராவதி காயர் புரொடியூசர் கம்பெனி கட்டுமான பணி அமைச்சர் துவக்கி வைப்பு

திருப்பூர், ஏப்.23 - திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன் றியம், முதலிபாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மானியத்துடன் ரூ.13.95  கோடி மதிப்பீட்டில் அமரா வதி காயர் புரொடியூசர் கம் பெனி கட்டுமான பணியை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலு வலர் த.ப.ஜெய்பீம் தலை மையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி முன்னிலையில் இந் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊரக தொழில்துறையின்  சார்பில் கயிறு குழுமம் பொது வசதி மையம்  என்கின்ற வகையில் அமராவதி காயர் புரொ டியூசர் கம்பெனி காங்கேயம் சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட ஊதியூர் முதலி பாளையம் ஊராட்சியில் அமைகின்றது. இதில், தமிழ்நாடு அரசின் பங்குத் தொகை யாக ரூ.8.75 கோடியும், பங்குதாரர்களின் தொகையாக ரூ.5.20 கோடியும் சேர்த்து மொத்தமாக சுமார் ரூ.13.95 கோடி மதிப் பீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் கட்டடம்  கட்டும் பணிகள் துவங்கி வைக்கப்பட் டுள்ளது. காயர் யான், காயர் மேட்டிங், காயர் ஜியோ  டெக்ஸ்டைல், ரப்பர் மோல்டு காயர் டோர் மேட், லேடெக்ஸ் காயர் தரை விரிப்பு, காயர்  பைபர் மற்றும் காயர் யான் டையிங் போன்ற  மதிப்பு கூட்டும் பொருட்கள் எல்லாம் இந் நிறுவனத்தின் மூலம் தயாரித்து ஊரக தொழில் என்ற முறையில் பல்வேறு நபர் களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்க இருக்கின்றது.

அந்த வகையில் இந்த பொருட் கள் எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது அந்நிய செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதனால் தமிழ் நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் கூடுதல்  வருவாய் கிடைக்கும்.  விவசாயத்தை சார்ந்த தொழில் நிறுவன மாக இருக்கின்றது. இதுவரை வீணாக சென்று கொண்டிருந்த தேங்காய் நாறுகள் எல்லாம் இன்றைக்கு மக்களுடைய பயன் பாட்டிற்கு மதிப்பு கூட்டும் பொருளாக உற் பத்தி செய்யக்கூடிய வாய்ப்பாக இருக் கின்றது. மேலும், இந்த பகுதியை சேர்ந்த வர்களுக்கு வேலை வாய்ப்பையும், பொரு ளாதாரத்தையும் நிச்சயமாக அதிகரித்து தரும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறி னார். பின்னர், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் நகராட்சி, தாராபுரம் சாலை, சக்தி நகர் பகுதியல் 2  ஏக்கர் பரப்பளவில் மாட்டுச்சந்தை அமைக் கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய  பொது மேலாளர் ராமலிங்கம், காங்கேயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேசன், அமராவதி புரொடியூசர் கம்பெனி லிமிடெட் தலைவர் சந்திரசேகர், இயக்குநர்கள், சரவணவேல், கார்த்திக், கந்தவேல், மகேஸ் வரன் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.