districts

img

அமராவதி, சண்முக நதியில் வெள்ளம்

தாராபுரம், நவ.13- தொடர் மழை காரணமாக அமராவதி மற் றும் சண்முக நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாராபுரம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக விடிய விடிய மழை பெய்து வருகிறது. தொடர் மழை கார ணமாக அமராவதி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. புதிய மற்றும் பழைய அம ராவதி ஆயக்கட்டு பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  தாராபுரம் 4 வழிச்சாலை பகுதி அமராவதி ஆற் றுபாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஒடு வதை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல் விழி செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்ட னர். பழனி பகுதியில் பெய்த கனமழை கார ணமாக தாராபுரம் ஊராட்சி, கொங்குகூர் தரைவழிப்பாலத்தில் சண்முக நதி நீர் கரை புரண்டு ஓடுகிறது. தாராபுரம் நகரில் தொடர் மழை காரணமாக காந்திபுரம் பகுதியில் முனி யப்பன் (42), மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கோபி (43), கோதண்டபாணி (52) ஆகி யோர் வீடுகள் முற்றிலும் சேதமானது. சேதம டைந்த 3 வீடுகளை வருவாய்த்துறை ஆய்வு  செய்து நிவராணம் வழங்க நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர். தாராபுரம் அலங்கியம் ரோடு பகுதியில்  தொடர் மழை காரணமாக ராம் நகர் மெயின் ரோட்டில் குளம்போல் வெள்ளநீர் தேங்கி நிற் கிறது. இவ்வழியாக இரு சக்கர வாகனம் மற் றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப் பட்டு வருகின்றனர். தாராபுரம் அடுத்துள்ள இடையன் கிணறு பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தாராபுரம் பகுதி யில் தொடர் மழை காரணமாக கடந்த மூன்று  நாட்களாக கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ள னர்.