நாமக்கல், செப்.10- பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் அமைந் துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1995, 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர் களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பயிற்றுவித்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது நண்பர்களை கண்டு மகிழ்ச்சியில் அவர்களை ஆறத்தழுவிக் கொண்டு, தங்களது மகிழ்ச்சியிணை வெளிப்படுத்தினர். தங்களது பழைய நண்பர்களுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து அன்பை வெளிப்படுத் தினர். மேலும் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தனர். பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி மகிழ்ந் தனர். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் திருவிழா போன்று காணப்பட்டது.