சேலம், மார்ச் 2- சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா செங்கனூரில் திமுக, அதிமுக, பாமக கட்சியில் இருந்து விலகி 116 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர். ஓமலூர் தாலுகா, செங்கனூர் உத் தண்டி வளவு கிளை சார்பாக மார்க் சிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. பகுதி கிளை செயலாளர் ஜி.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா கட்சி கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், ஓமலூர் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன், மாவட்டக்குழு உறுப் பினர் டி.பரமேஸ்வரி உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்றனர். முன்னதாக, இப்பகுதியில் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், செங்கனூர் பகுதியில் உள்ள திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 116 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கிடவும், பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும், மயா னத்தை மீட்டு தர வேண்டும், நீண்ட காலமாக கட்டி முடிக்கப்பட்டு மூடி கிடக்கும் சுகாதார கழிப்பிடத்தை திறந்திட வேண்டும், செங்கனூர் பகுதி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி பாதை தற்போது அடைக்கப்பட்ட நிலையில் பாதையை மீட்டு தர வேண்டும், நியாய விலைக்கடை ஏற் ்கனவே இயங்கி வந்த இடத்தில் மீண்டும் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக் ்கைகளை போராடி மார்க்சிஸ்ட் கட்சி வென்றெடுக்கும் என நம்பிக்கை தெரி வித்தனர்.