அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி ஈரோடு, நவ. 7- ஓடை பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநக ராட்சி பகுதியில் திங்களன்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அன்னை சத்யா நகர், பூம்புகார் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் சூளை ஆகிய பகுதிகள் மழைநீரால் சூழப்பட் டது. இதில் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத் துச்சாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா, மாநகராட்சி ஆணையர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செவ்வாயன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர் சு.முத்துச்சாமி பேசுகையில், குடியி ருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக, பெரும் பள்ளம் ஓடையை தூர்வாருவதற்கும், ஓடையின் மேல் உள்ள பாலம் மற்றும் குடிநீர் குழாய்களை உயர்த்துவதற்கும் உடனடியாக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். அதேபோன்று, இப்ப குதியிலுள்ள ஓடை பகுதியில் வசிப் பவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு கள் வழங்கி, ஆக்கிரமிப்புகள் முழுமை யாக அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 4 நடமாடும் மருத்துவ குழுக்களும், மக்களைத்தேடி மருத்துவக் குழுவும் மற்றும் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்க ளுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் 3 வேளையும் உணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மழைநீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தரத்தீர்வு ஏற்படுத்த விரிவான திட்டங்கள் தயா ரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள் ளப்படும். இவ்வாறு சு.முத்துச்சாமி தெரி வித்தார்.