districts

மார்க்கெட்டில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கிடுக

சேலம், மார்ச் 31- சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் முன்னு ரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும் எனக்கோரி, பூ மாா்க்கெட் சங்க நிர் வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு  அளித்தனர். சேலம், கடைவீதி பகுதியில் தேர்தல் பிரச் சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினிடம் வியாபாரிகள் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, சேலம் நகரில் கடந்த 50 ஆண்டுக ளுக்கும் மேலாக வ.உ.சி. மாா்க்கெட் செயல் பட்டு வருகிறது. அதில் பூ, காய்கறி மற்றும்  கறிக்கடைகள் பழைய மார்க்கெட் கட்டடத் தில் இயங்கி வந்தது. கடந்த 3 ஆண்டுக ளுக்கு முன்பு அதை இடித்துவிட்டு ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்டப் பட்டது. அப்போது, பழைய கட்டடத்தில் விற் பனை செய்து வந்த வியாபாரிகளுக்கு தற்கா லிகமாக விக்டோரியா ஹால் அருகிலும், சந்தை பகுதியிலும் கடைகள் நடத்த அரசு  அனுமதி வழங்கியது. புதிய கட்டடம் கட்டிய  பிறகு ஏற்கெனவே கடை நடத்தி வந்தவர் களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனக்  கூறப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதம் புதிய மார்க்கெட்டில் கடைகள்  கட்டப்பட்டு, தமிழ்நாட்டின் முதல்வராகிய நீங் கள் முன்னின்று புதிய கட்டடத்தை திறந்து வைத்தீர்கள். பின்னர் மாநகராட்சி நிர்வாகம், புதிய கட்டடத்தில் வியாபாரிகளுக்கு கடை களை ஒதுக்க முயற்சி செய்யாமல், ரூ.9 கோடிக்கு ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தனர். புதிய கட்டடத்தில் அந்த ஒப்பந்ததா ரர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கடைகளை ஒதுக்கியதால், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினோம். அப்போது, சிறப்புக்குழு அமைத்து தங்க ளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடை களை ஒதுக்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும். அதுவரை, யாருக்கும் எந்த ஒப் பந்த உத்தரவும் கொடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சேலம்  மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்ற உத் தரவை மதிக்காமல், ஒப்பந்ததாரர்களுக்கு மீண்டும் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இத னால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளோம். எனவே, வ.உ.சி. மார்க்கெட் பூ வியா பாரிகள் நலன் கருதி உயர்நீதிமன்ற உத்த ரவை அமல்படுத்த மாநகராட்சிக்கு உத்தர விட வேண்டும். மேலும், எங்களின் நலன் காக்க, முன்னுரிமை அடிப்படையில் கடை களை ஒதுக்க வேண்டும் என மனுவில் தெரி வித்துள்ளனர்.