districts

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

நாமக்கல், ஆக.22- மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் இணை மின் திட்டத்தை செயல்படுத்த மேலும் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழ் நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை துறை சார்பில்  கரும்பு சக்கையில் இருந்து 15 மெகாவாட் மின் சாரம் தயாரிக்க 2011 ஆம் ஆண்டில் இணை மின் திட்டத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்தார். 60 சதவிகிதம் பணிகள் முடிந்த நிலையில், பணி கள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபின் மாநி லங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் முயற்சியை தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்பேரில், இணை மின் திட்ட பணிகளை செயல்படுத்த மேலும் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. இத்திட்டம் முழுமை பெற்று செயல் பாட்டிற்கு வந்தால் சர்க்கரை ஆலைக்கு 3  மெகாவாட் யூனிட் மின்சாரம் பயன்பாட்டிற் கும், மீதமுள்ள 12 மெகா வாட் மின்சாரம் விற்பனை செய்யப்படும். இதனால் சர்க்கரை ஆலைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கு மென அதிகாரிகள் தெரிவித்தனர்.