districts

img

நூறுநாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கிடுக

தருமபுரி, செப்.5- நூறுநாள் வேலை திட் டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க  வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத் தினர் மொரப்பூர் வட்டார  வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும், வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினக்கூலி ரூ.600 வழங்க  வேண்டும். ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க  வேண்டும். கலைஞரின் மகளிர் உரிமை திட் டத்தின் கீழ் வழங்கும் ரூ.1000 நிதியினை  அனைத்து ஏழை மக்கள் குடும்பத்திற்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாய  தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எம்.கஜேந்திரன் தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.முத்து, மாவட்டத் தலைவர் கே. கோவிந்தசாமி, மாவட்ட துணைத்தலைவர்  இ.கே.முருகன், ஒன்றியச் செயலாளர் எம்.கே.ராமன், கர்னல் ஆபிரகாம், முருகன், தங்கராஜ், இந்திராகாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.