தருமபுரி, டிச1- மருத்துவத்துறையில் உள்ள அனைத்து பணியா ளர்களையும் நிரந்தரமாக்க வேண்டும் என நல்வாழ்வு இயக்கம் வலியுறுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்ட நல்வாழ்வு இயக்கம் சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான நல் வாழ்வு குறித்து பயிற்சி தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சீட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் அ.சரவணன் தலைமை வகித்தார். நலவாழ்வு நிர்வாகிகள் தனலட்சுமி, துரை மணி, காசிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசினார். மாநில நல் வாழ்வு ஒருங்கிணைப்பாளர் எம்.சங்கர் நல்வாழ்வு நோக்கம் குறித்து பேசினார். மாநில நலவாழ்வு செயலாக்க குழு உறுப்பி னர்கள் அமீர்கான், த.சுரேஷ் ஆகியோர் கருத்துரையாற்றினர். அனைவருக்கும் நல்வாழ்வு சேவைகள் என்பதை அடிப்படை உரிமையாக்க சட்டம் இயற்ற வேண்டும். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நல்வாழ்வுக்கு குறைந்த பட்சம் 5 சதவிகித நிதி ஒதுக்க வேண்டும். அனைத்து விதமான அரசு தனியார் கூட்டு மருத்துவ திட்டங்களையும் உடனடியாக கைவிட வேண்டும். அரசு மருத்துவத்துறை யில் உள்ள அனைத்து பணியாளர்களும் நிரந்தர பணியாளர்களாக பணி அமர்த்த வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை புற நோயாளிகள் சிகிச் சையை உடனடியாக தொடங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளை நிர்வாகிப்பதற்கு நிதி செலவு, சேவைகள் உட்பட அனைத்து செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு குழு அமைத்து சீராக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.