districts

img

பாத்திரத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அனைத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை

திருப்பூர், டிச. 20 - திருப்பூர் வட்டாரத்தில் எவர்சில்வர், பித்தளை உள் ளிட்ட பாத்திர தயாரிப்பில்  ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் முடி வடைய உள்ளதால், 50 சதவி கிதம் முதல் 70 சதவிகிதம்  வரை பாத்திர வகைகளுக்கு  ஏற்ப கூலி உயர்வு வழங்க  வேண்டும் என்று அனைத்து பாத்திரத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள் ளன. அனைத்து பாத்திரத் தொழிற்சங்கங்க ளின் கூட்டுக் கமிட்டிக் கூட்டம் செவ்வாய்க்கி ழமை சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்க  அலுவலகத்தில் ந.வேலுச்சாமி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், பாத்திர சங்கத் தலைவர்  ஏ.ஆறுமுகம், செயலாளர் கே.குப்புசாமி, பொருளாளர் என்.குபேந்திரன், ஏஐடியுசி  சார்பில் ச.செல்வராஜ் எம்.சி., காமாட்சியம் மன் சங்கம் சார்பில் எஸ்.பி.அர்சுனன், ஐஎன்டி யுசி சார்பில் வி.ஆர்.ஈஸ்வரன், எல்பிஎப் சார் பில் ந.வேலுச்சாமி, என்.ரத்தினசாமி, ஏடிபி நிர் வாகி ஆர்.தேவராஜ் மற்றும் எச்எம்எஸ்., பிஎம்எஸ்., உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பாத்திரத் தொழிலாளர் களின் ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் மாதத்து டன் நிறைவடைய உள்ளது. புதிய ஊதிய  ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து சங்கங் களின் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர். இதன் முடிவில் எவர்சில்வர் வகை பாத்தி ரத்திற்கு 50 சதவிகிதமும், பித்தளை, தாமிரம்,  வார்பு அயிட்டங்களுக்கு 60 சதவிகிதமும், ஈயப்பூச்சுக்கு 70 சதவிகிதமும் ஊதிய உயர்வு  கேட்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து எவர்சில்வர் பாத்திரப் பட்ட றைதாரர் சங்கத்திற்கும், பித்தளை பாத்திர  உற்பத்தியாளர் சங்கத்திற்கும் கோரிக்கைக்  கடிதம் அனுப்புவது என்றும், தொழிலாளர் துறைக்கும் கோரிக்கை கடிதம் அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.