districts

img

பிப்.16 வேலை நிறுத்தம்: அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு

திருப்பூர், பிப். 3- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர், விவ சாயிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கை களுக்கு எதிராகவும், நாட்டை பாதுகாக்கவும் பிப்ர வரி 16ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் திருப்பூரின் அனைத்து பிரிவு  தொழிலாளர்களும் பங்கேற்குமாறு தொழிற்சங் கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற் சங்கங்களின் கூட்டம்  வியாழனன்று பி.என். ரோடு ஏஐடியுசி பனியன் சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஏஐடியூசி பனியன் சங்கத் தின் பொதுச் செயலாளர் என்.சேகர் தலைமை தாங் கினார். கூட்டத்தில் சிஐடியு பனியன் சங்கத் தலை வர் சி.மூர்த்தி, ஏஐடியுசி பனியன் சங்கச் செயலா ளர் ஆர் செந்தில்குமார், எல்பிஎப் பனியன் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் பூபதி, ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் அ.சிவ சாமி, எச்.எம்.எஸ். மாவட்டச் செயலாளர் ஆர்.முத் துசாமி, எம்எல்எப் பனியன் சங்க செயலாளர் மனோ கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இக்கூட்டத்தில்  ஒன்றிய பாஜக அரசின் தவ றான பொருளாதார கொள்கையினை கண் டித்தும், தொழிலாளர், விவசாயிகள் நலன்க ளுக்கு விரோதமாக கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களுக்காக செயல்பட்டு வருவதை கண்டித் தும், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின், விவசா யிகளின் நலன்களையும் பறிகொடுத்து வரும்  ஒன்றிய பிஜேபி அரசின் பேரழிவுக் கொள்கை களுக்கு எதிராகவும், கடும் நெருக்கடியில் உள்ள  இந்திய நாட்டைப் பாதுகாக்கவும், தொழிலா ளர்கள், விவசாயிகள் அமைப்புக்கள் ஒன்று பட்டு போராடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வரும் பிப்ரவரி 16 அன்று நாடுமுழுவதும் பொது  வேலைநிறுத்தம், கிராமப்புறங்களில் பந்து மற்றும் மறியல் போராட்டம் நடத்திட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன் னணி அறைகூவல் விடுத்துள்ளது. அதன் அடிப்ப டையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிலாளர்கள் முழுமையாக வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கும்  வேலைநிறுத்தம் குறித்து முன் அறிவிப்பு நோட் டிஸ் கொடுப்பது என்றும் முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பனியன் தொழி லாளர்கள் முழுமையாக கலந்து கொள்ள வேண் டும் என்று அனைத்து பனியன் தொழிற் சங்கங்களின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.