districts

img

அகில இந்திய வேலை நிறுத்தம் மிகப்பெரும் வெற்றி பெறும்

கோவை, மார்ச் 26-  மார்ச் 28, 29ல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் கோவை மாவட்டத்தில் மிகப்பெரும் வெற்றிபெறும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள் ளது.  இதுதொடர்பாக கோயமுத்தூர் பத்தி ரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய் தியாளர்கள் சந்திப்பில் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகளான எல்பி எப் ரத்தினவேல், ஐஎன்டியுசி  பி.சண்முகம், ஏஐடியுசி ஆறுமுகம், சி.தங்கவேல், எச்எம் எஸ் டி.எஸ்.ராஜாமணி, சிஐடியு எஸ்.கிருஷ் ணமூர்த்தி, எம்எல்எப் சார்பில் மு.தியாக ராசன், ஏஐசிசிடியு  ஆர்.தாமோதரன்,  எஸ்டி டியூ  முகமது ரபீக், ஷாஜகான், எல்டியூசி  மு.ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கூறுகை யில், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி வரும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் தலைமையில் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் இந்த போராட் டத்தையொட்டி ஆட்டோக்கள், பேருந்து கள், ரயில்கள் ஓடாது. தொழிற்சாலைகள், வங்கிகள், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத் துறை ஊழியர்கள் இப்போராட்டத்தில் முழு மையாக பங்கேற்பர். மேலும், வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 28 ஆம் தேதி கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மறியல் போராட்டம் நடைபெறும்.  மார்ச் 29 ஆம்  தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெ றும்.

பொருட்படுத்த வேண்டியதில்லை

மேலும், தமிழகத்தின் ஆளும் கட்சியாக உள்ள திமுக இப்போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளது. ஆகவே, தமிழக அரசின் தலைமை செயலாளர் அறிக்கையை பொருட்படுத்த வேண்டிய தில்லை. அது வழக்கமான நடைமுறை தான். ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரண மாக நாட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே, இந்த வேலை நிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றி பெறும். எத்தகைய மிரட்டல், அச் சுறுத்தலையும்  தொழிலாளி வர்க்கம் எதிர் கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என்றனர். 

திருப்பூர்

திருப்பூர் ஏஐடியுசி அலுவலகத்தில் (மார்ச் 26) சனியன்று சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.சேகர் ஆகியோர்  செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப் போது  அவர்கள் கூறியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, தாரா புரம், பல்லடம், ஊத்துக்குளி, அவிநாசி உள் பட எட்டு மையங்களில் 28 ஆம் தேதி மறி யல் நடத்தப்படுகிறது, அடுத்த நாள்  29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படு கிறது.  விவசாய சங்கங்களும் இந்த வேலை  நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர் சங் கங்கள், துறைவாரி தொழில் கூட்டமைப்பு களின் ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.  கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை வேலை நிறுத்தத்தில் தொழிலாளர் கள், விவசாயிகள், வர்த்தகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். வர்த்தகர் கள், வியாபாரிகளிடம் கடையடைப்பு நடத் துவதற்கு வேண்டுகோள் விடப்பட்டுள் ளது.  

கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 15 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆனால் இம்முறை அதை விட கூடுதல் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்திய நாட்டையும், இந்திய மக்களையும் பாதுகாப்பதற்கு இந்த போராட்டத்தை முழு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்டத் தின் அனைத்துப் பகுதி மக்களையும் தொழிற்சங்கங்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பேட்டியின்போது, சிஐடியு பனி யன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத்,  ஏஐடியுசி செயலாளர் ஜி.ரவி, எல்பிஎப் மாவட்டத் துணைத் தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர் ஓட்டல் சங்கச் செய லாளர் மகேஷ், ஐஎன்டியுசி மாவட்டத் தலை வர் அ.பெருமாள், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் மாவட்டச் செயலாளர் எஸ்.பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.