districts

img

ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதா?

சேலம், டிச.20- ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யும் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சி  மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை களை தாமதமின்றி, அரசு நிர்ணயித்துள்ள கால வரை யறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் தற் காலிக பணிநீக்கம் செய்யும் முறையை முற்றிலும் கைவிடப் பட வேண்டும். இளநிலை பொறியாளர்களுக்கும், உதவி  பொறியாளர்களுக்கும் இணையான ஊதிய விகித அனுமதி  ஆணையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வுதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெ.கலை யரசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ஜோதி மதன், எம்.கே.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற் றினர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெ. அன்பழகன், அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செய லாளர் சி.ராஜ்குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பி.ஜே.கண்ணன் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். முடிவில், பட்டு வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் பி.கோவிந்தசாமி நிறைவுறையாற்றினார்.