districts

img

விதி மீறிய ஈஷா, காருண்யா கட்டிடங்கள்

கோவை, அக்.10-  அனுமதியின்றி கட்டப்பட்ட ஈஷா, காருண்யா கட்டிடங்களை அகற்ற வேண்டி  16 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவை, காந்திபுரம் சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில் சிபிஎம், காங்கிரஸ், சிபிஐ, மதிமுக, விசிக, தபெதிக மற்றும் அம் பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோ சனை கூட்டத்திற்கு பின்னர் சி.பத்மநாபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று (அக்.11) சமூக நல்லிணக்கண மனித சங்கிலி போராட்டம் கோவையில் நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங் கேற்பார்கள். கோவை மக்களிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமான இந்த மனித சங்கிலி நடத்தப்படுகிறது.

மேலும், கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் செயல் பட்டு வரும் ஈஷா யோகா மையம் மற்றும்  காருண்யா கல்வி  நிறுவனங்கள் அரசு அனு மதி பெறாமல் கட்டிடங்கள் கட்டி இருப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியு றுத்தி வரும் 16 ஆம் தேதி அனைத்து கட்சி  சார்பில்  ஆலந்துறை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.  கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் 500 சதுர அடியில் அனுமதி யின்றி கட்டிடம்  கட்டி இருந்தால் கூட கடும்  நட வடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த நிறுவ னங்கள் 10 லட்சம் சதுர அடிக்கும்  மேலான  இடங்களில் எந்த  அனுமதியும் இன்றி கட்டி டங்கள் கட்டியுள்ளனர். மலையடிவாரத்தில் உயிர் சூழலை பாதிக்கும் வகையில் அனுமதி யின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இத னால்  20 கி.மீ சுற்றளவில் யானைகள் வழிதடம் பாதிக்கப்பட்டு அவை தடம் மாறுகின்றன.  இந்த ஈஷா,காருண்யா நிறுவனங்க ளுக்கு சுற்று சுழல் அனுமதி அளிக்கக்கூடாது. அனுமதியின்றி கட்டப்பட்ட ஈஷா, காருண்யா  நிறுவனங்களின் கட்டிடங்களை இடித்து அப் புறப்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி  வரும் 16 ஆம் தேதி ஆலாந்துறையில்  அனைத்து கட்சியினரும் இணைந்து ஆர்ப் பாட்டம் நடத்த இருக்கிறோம். கல்வி நிறுவ னங்களுக்கு சுற்று சுழல் அனுமதி தேவை யில்லை என்பது மோசமான நடைமுறை. நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மலையடிவாரத்தில் அமைந் துள்ளது. அனுமதியற்ற கட்டிடங்கள் மீது ஒன் றிய, மாநில அரசுகள்  உரிய நடவடிக்கை கள் எடுக்க வேண்டும், என்றார்.