districts

img

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பேரவை

திருப்பூர், ஆக.14 - தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தாராபுரம்  வட்ட கிளை 9ஆவது பேரவை கூட்டம், தாராபுரம் பார்க் சாலையில் உள்ள தமிழ் கலை மன்ற அரங்கில் நடைபெற்றது. இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீட்டில் உள்ள குறைகளை போக்கி அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இந்தப் பேரவைக்கு வட்ட கிளை தலைவர் மு.பீர்ஜாபர்  தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் மு.பாலச்சந்திர மூர்த்தி  துவக்கி வைத்துப் பேசினார். செயலாளர் ராஜேந்திரன்,  பொருளாளர் நசீரு தீன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். மாவட்ட கருவூல அலுவலர் முரு கேசன், தாராபுரம் உதவி கருவூல அலுவலர் தி.கதிரவன், ஓய்வு பெற்ற தலை மையாசிரியர் பொன்னுசாமி, ஓய்வு பெற்ற அரசு சித்த மருத்துவர் தங்கராசு, ஓய்வு பெற்ற ஆசிரியர் நல அமைப்பு வட்ட செயலாளர் சீரங்கராயன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட பொருளாளர் கி.மேகவர்ணம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் மணி நன்றி கூறினார்.