சேலம், ஆக.20- மனிதநேயத்தோடு மணிப்பூர் கலவரத்தை தடுத்திட வலியுறுத்தி ஏற்காட்டில் அமைதிப் பேரணி நடைபெற்றது. கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் கலவரங்கள் நடை பெற்று வருகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 350க்கும் மேற்பட்ட தேவாலயங் கள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. 7000 வீடுகள் இடிக்கப் பட்டுள்ளது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டுள்ளனர். 197 கிராமங்கள் தீக்கிரை யக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற் கும் மேற்பட்டோர் அகதிகள் முகா மில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை தடுக்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசும், மணிப்பூர் பாஜக அரசும் வேடிக்கை பார்த்து வருகிறது. ஒன்றிய, மாநில பாஜக அரசு உடனடியாக இந்த கலவ ரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நீதி வழங்க வேண்டும். உடைமை களை இழந்தவர்களுக்கு நிவா ரணம் வழங்கிட வலியுறுத்தி ஏற்காட்டில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு, ஏற்காடு பங்கு தந்தை மரிய ஜோசப் ராஜ், பூசாரி சுந்தரம், சையத் மசூத் ஆகி யோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்காடு ஒன்றியச் செயலாளர் டி. நேரு, சகோதரி ஆகினேஷ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஏற்காடு காந்தி பூங்காவி லிருந்து துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வழியாக ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகில் நிறை வடைந்தது. ஒண்டிக்கடை பகுதியில் நடை பெற்ற கண்டன கூட்டத்தில் எழுத் தாளர் ஏற்காடு இளங்கோ, ரெக்ஸ் ஸ்டாலின், பெருமாள், தேவ பிரசாத் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். அமைதிப் பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் திரளாக கலந்து கொண்டனர்.