districts

img

கோவையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

கோவை, அக்.27- கோவையில் நடைபெற்ற அசாதராண சூழல் மற்றும் அதனை அரசியல் ஆதாயத் திற்காக பயன்படுத்தும் செயல் ஆகிய வற்றை முறியடிப்பதற்காக அனைத்து கட்சி யின் ஆலோசனை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள  கோவை மாவட்ட திமுக கழக அலுவலகத் தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கு  பெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகி யோர் தலைமை வகித்தனர்.  

கோவையில் தற்போது உள்ள அமைதி சூழ்நிலை குறித்து நடைபெற்ற இக்கூட்டத் தில், திமுக கோவை மாநகர் மாவட்ட செய லாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலா ளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மேயர் கல் பனா ஆனந்தகுமார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வி.எம்.சி.மனோகரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மதிமுக ஆர்.ஆர்.மோகன்குமார், சிபிஐ சிவசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரபு, கொமதேக. ஆர்.எஸ்.தனபால், இயூ முஸ்லிம் லீக் பி.முகமது பஷீர், மனித நேய மக்கள் கட்சி சின்னு (எ) சர்புதீன், ஆதித்தமி ழர் பேரவை ஆர்.ரவிக்குமார், மனித நேய  ஜனநாயக கட்சி எம்.எச்.அப்பாஸ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில், மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாஜக அறிவித் துள்ள பந்த் போராட்டத்தை கண்டித்தும், வியாபாரிகள், வார்த்தக நிறுவனங்கள் வழக் கம்போல் செயல்பட மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும். கோவை  மாவட்டத்தின் அமைதியை, ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை தனிமைப்படுத்து வது, கோவையின் அமைதியை காக்க  தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவது  என முடிவெடுக்கப்பட்டதாக அனைத்து கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.