உதகை, ஜூன் 21- கூடலூர் பகுதிகளில் மனித உயிரிழப்பு களை ஏற்படுத்தி வரும் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் நீலகிரி மாவட்ட ஆட்சி யர் அம்ரிதிடம் அளித்துள்ள மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானை களின் தாக்குதல் அதிகரித்து, மனித உயிரி ழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மே 27 ஆம் தேதியன்று வேலி ஆரோட்டுப்பாறை என்ற இடத்தில் ஆனந்தராஜ், பாரம் எஸ்டேட் டில் மாலு ஆகியோர் காட்டுயானை தாக்கி யதில் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக் குள் விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், இதுவரை அந்த யானையை விரட்டவில்லை. தினந்தோறும் காலை, மாலை நேரங்க ளில் கிராமங்களுக்கு உள்ளே வந்து விடு கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அச்சத்து டன் சென்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், யானையை பிடிப்பதற்கான உத்தரவு இதுவரை வர வில்லை என்கின்றனர். எனவே, மனித உயி ரிழப்புகளை ஏற்படுத்தி வரும் காட்டுயானை யைப் பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண் டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திமுக சார்பில் செல்வரத்தி னம், அதிமுக நிர்வாகி ஜெயராமன், காங்கி ரஸ் சார்பில் இபினு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குஞ்சி முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சகாதேவன், இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் முகமது கனி, பாஜக சார் பில் பாஸ்கரன், நாம் தமிழர் நிர்வாகி கேதீஸ் வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக இணைந்து மனுவை ஆட்சியரிடம் அளித்த னர்.