கோவை, செப்.9- பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்தக்கோரி, அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை கோவையில் பி.ஆர்.நடராஜன் எம்பி., துவக்கி வைத்தார். ஊழியர்களின் பங்களிப்பு திட்ட மாக இருக்கிற, புதிய பென்சன் திட்டத் தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற குரல் தொடர்ந்து எழுந்து வருகிறது. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப பென்சன் தொகை மாறுபடும் என்பதும், ஓய்வூதியர்களின் சொந்த பணத்தையே பிடித்து பங்குச்சந்தை யில் முதலீடு செய்வது ஊழியர் விரோத கொள்கை என்பதும் இவர்களின் குற்றச் சாட்டாக உள்ளது.
வயது முதிர்ந்த காலத்தில் நிரந்திரமற்ற ஓய்வூதியத் தொகையை பெற்று காலத்தை கடத்த முடியாது என்கிற ஓய்வூதியர்களின் நியாமான குற்றச்சாட்டு. இதனை கண்டித்து நாடு முழுவதும் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்கிற ஒற்றை கோரிக்கையோடு அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நாடு தழுவிய ரத யாத்திரை துவங்கப் பட்டுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதியன்று கன்னி யாகுமரியில் துவங்கிய இந்த ரத யாத் திரை, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 30 நாட்கள் பயணித்து அக்டோபர் 5 ஆம் தேதி தலைநகர் தில்லி சென்றடைகிறது. கோவை மாவட்டத்தில் சனியன்று இந்த பிரச்சார ரத யாத்திரை வாக னத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் துவக்கிவைத்தார். கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு எழுச்சிகரமான வரவேற்புடன் துவங் கியது. இந்நிகழ்வில், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் பி.ஹரி கோவிந்தன், இணை பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன், செயல் தலைவர் பசவராஜ் குரிக்கர், மாநிலத் தலைவர் மு.லெட்சுமி நாராயணன், மாநிலப் பொருளாளர் இரா.குமார் உள்ளிட்டோர் பிரச்சார ரத யாத்திரை யின் நோக்கங்கள் குறித்து உரையாற் றினர். இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், அரசு ஊழியர் கள், ஓய்வூதியர்கள் திரளானோர் பங் கேற்றனர்.