districts

img

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க முழு முயற்சி

திருப்பூர், ஆக.26- பெண்களுக்கு எதிரான உடல் மற்றும் மனரீதியான வன்முறை யைத் தடுக்க முழு முயற்சி மேற் கொள்ள வேண்டும் என்று திருப்பூர்  மாநகர காவல் துணை ஆணையர் சுஜாதா கூறினார். திருப்பூர் சிக்கண்ணா அரசு  கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2, திருப்பூர் அரிமா சங்கம் இணைந்து  திங்களன்று  கல்லூரி வளாகத்தில்  பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற் றும் மனித சங்கிலியும் நடைபெற் றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தின ராக திருப்பூர் மாநகர காவல் துணை  ஆணையர் சுஜாதா கலந்து கொண்டு பேசினார். “ஆணும், பெண்ணும் சமம் என்பதை அனைவரும் உணர வேண்டும், தங்களது செயல்பாடுக ளால் எந்த ஒரு பெண்ணையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது, பெண்க ளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு  முயற்சியில் ஈடுபட வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். அது அந்த தலைமுறையை காக் கும். பாலியல் வன்கொடுமை தடுப் புச் சட்டம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்வில் மாணவிகள் கயல்விழி மற்றும் இந்து மதி ஆகியோர் சிலம்பாட்டம் ஆடி னர். நிதிஸ்வரன் மற்றும் பூபதி ஆகாஷ் ஆகியோர், “பெண் கல் வியை ஊக்குவிக்க வேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினர். அரிமா சங்கத் தலைவர் பரமசிவம் வாழ்த்திப் பேசினார். மாணவ பிரதிநிதி ரேவதி நன்றி கூறினார். இதையடுத்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு மனித சங்கிலி ஏற்ப டுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி, உறுதிமொழி ஏற்றனர்.