சேலம், அக்.28- தொழிலாளர் விரோத மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை களை கண்டித்தும், விலைவாசியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும், உணவு மருந்து கள் வேளாண் இடு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண் டும். பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான அநியாயமாக உயர்த்தப்பட்ட மத்திய கலால் வரியை குறைத் திட வேண்டும். உணவு பாதுகாப் பிற்கு உத்தரவாதம் அளித்திட வேண்டும், பொது விநியோக முறையை விரிவாக்கம் செய்திட வேண்டும், மின்சார மசோதா 2021 ஐ திரும்ப பெற வேண்டும். கிராமப் புற வேலை உறுதி சட்டத்தின் படி ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் நாள் ஒன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட் டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கார்ப்ரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் மோடி அரசே, தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடாதே உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சேலம் சூரமங்கலம் பகுதி யில் இருந்து வாகன பேரணி நடை பெற்றது. இந்த பேரணி ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, மணக்காடு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அம்மா பேட்டை, தாதகாப்பட்டி உள் ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதி யில் பிரச்சாரம் மேற்கொண்டது. இதில் சிஐடியு மாவட்ட செய லாளர் கோவிந்தன், மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், பொரு ளாளர் இளங்கோ, சாலை போக்கு வரத்து சங்க மாநில உதவித் தலை வர் எஸ்.கே.தியாகராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, எல்பிஎஃப் நிர்வாகி பொன்னி பழனியப்பன், கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி முனுசாமி, எஸ்கேஎம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.சந்திரமோகன், மற்றும் நிர்வா கிகள் எ.ராமமூர்த்தி பி.தங்கவேலு, அன்பழகன், மோகனசுந்தரம், ஐஎன்டியூசி, எச்எம்எஸ், ஏஐசி சிடியு உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற் றனர்.