அவிநாசி, ஜன.15- திருமுருகன்பூண்டி நகராட்சி அருகே உமையஞ்செட்டிபாளை யம் சாலையை சீரமைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி நகராட்சி ஆணையா ளரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட உமையஞ் செட்டி பாளையத்திலிருந்து ராக்கி யாபாளையம் செல்லும் சாலையில் குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற் காக சாலையில் பள்ளம் தோண்டப் பட்டது. ஆனால், வேலை முடித்த பிறகு தார்ச்சாலை சீரமைக்கப்படா ததால் வாகன ஓட்டிகள் கடும் சிர மத்திற்குள்ளாகி வந்தனர். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பழுதடைந்த சாலையில் வாழை மரம் நடும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து, சாலையை சீர மைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என அதிகாரிகள் வாக்கு றுதி அளித்தனர். ஆனால், தற்போது வரை சாலையை சீரமைத்து தரவில்லை. எனவே, உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என வலியு றுத்தி சிபிஎம் மாவட்ட குழு உறுப் பினர் வெங்கடாசலம், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் தேவ ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கிளைச் செய லாளர் சுப்பிரமணி ஆகியோர் நக ராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம் மனுவை பெற்றுக்கொண்ட அதி காரி நிறைவேற்றித் தருவதாக கூறி னார்.