திருப்பூர், மே 10 - இந்திய மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மல்யுத்த சம்மேளனத் தலைவரான பாஜக எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி திருப்பூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக செவ் வாயன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி பத்திர சங்க மாவட்ட செயலாளர் எஸ்.செல்வராஜ் தலைமை ஏற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, துணை மேயர் ஆர்.பாலசுப்பிர மணியம், மாவட்டப் பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன், மாநிலச் செயலாளர் என்.சேகர் உள்ளிட்டோர் உரையாற் றினர். ஏஐடியுசி சங்கத்தினர் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்தும், போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.