கோவை, ஜூலை 14- விமான நிலைய விரிவாக்கம் என்பது கோவை மாநகரத்திற்கும் முகவும் தேவையான ஒன்றாகும் என ஒன்றிய இணையமைச்சர் பகவத் கிஷன் ராவ் கோவையில் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு அமல்படுத்தி யுள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வ தற்காக ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன் ராவ் கோவை வந்துள்ளார். 2 நாட்கள் பயணமாக ஒன்றிய இணையமைச்சர் கோவை வந் துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அப்போது செய்தி யாளர்களிடம் ஒன்றிய அமைச்சர் பகவத் கிஷன் ராவ் கூறுகை யில், புதிய தொழில் தொடங்கு பவர்களை ஊக்குவிக்கும் வகை யில், முத்ரா கடன் திட்டத்தின் மூலம் பிணையில்லா கடன் வழங் கப்பட்டு வருகிறது. கோவை மாந கரில் உள்ள சாலை பிரச்சனை, திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை திட்ட பணிகளில் உள்ள கோளாறுகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது. விமான நிலைய விரிவாக்கம் என்பது இந்த நகருக்கு மிகவும் தேவையானது. இதில் ஒரு சில விஷயங்கள் ஒன்றிய அரசையும், மாநில அரசையும் சார்ந்துள்ளது. இரண்டு அரசுகளும் இனைந்து செயல்பட வேண்டும். அனைத்து நலத்திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும், என்றார்.