districts

img

அவசரகதியில் அவிநாசி அத்திக்கடவு திட்டம்: தாமதத்திற்கு அதிமுக தான் காரணம் ஆ.ராசா எம்பி., குற்றச்சாட்டு

அவிநாசி, மார்ச்.6- அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை  அதிமுக அவசரகதியில் கொண்டு வந்த தால் தான் தாமதம் ஏற்படுகிறது என்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா  குற்றச்சாட்டியுள்ளார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா திருப்பூரில் நீலகிரி தொகுதிக் குட்பட்ட அன்னூர், அவிநாசி, திருமுரு கன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த  அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து  செய்தியா ளர்களை சந்தித்து கூறியதாவது, அவி நாசி தொகுதியை பொருத்தவரை 40  கோடியில் டைட்டில் பார்க், ரூ.5 கோடியில்  அரசு மகப்பேறு பிரிவு, ரூ.6 கோடி மதிப் பீட்டில் வணிக வளாகம், ரூ.45 லட்சம் மதிப் பீட்டில் பயணிகள் நிழல் குடை, ஆதிதி ராவிடர் நலத்துறை சார்பில் சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. அவிநாசி தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளது. இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்த  தான் இந்த கூட்டம் ஏற்பாடு  செய்யப்பட்டது. திருப்பூரில் 4  ஆவது குடிநீர் திட்டம் முடிய உள்ளது.  அத்திட்டத்திலிருந்து கூடுதலாக தண் ணீர் கிடைக்கும். மேலும், அவிநாசி அத் திக்கடவு திட்டத் திட்டத்தை அவசரகதி யில் ஆரம்பித்ததால் தான், இதுவரை நிறைவு பெறாமல் இருக்கிறது. விரை வில் திட்டத்தை செயலபாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை யும் நீலகிரியில் போட்டியிட விருப்ப மான அளித்துள்ளேன். அது என்னு டைய உரிமை, யார் வேட்பாளர் என்பது  தலைவர் தான் அறிவிப்பார் என தெரி வித்தார். இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற  உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், திருமுரு கன்பூண்டி நகர மன்ற தலைவர் குமார்,  அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன் னுச்சாமி, உட்பட அரசுத்துறை அதிகாரி கள் கலந்து பலர் கொண்டனர்.