districts

img

அனுமதியின்றி சாலையில் ராட்சத கொடி கம்பங்களை வைத்து அதிமுக அராஜகம்

சேலம், நவ.14- சேலத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தின்போது, அனுமதியின்றி சாலையில் ராட்சத கொடி கம்பங்களை நட் டுள்ளனர். ராட்சத கம்பங்கள் சாலையில் செல்லும் பொது மக்கள் மீது விழும் அபாயம் உள்ளதால், போதிய பாதுகாப்பு இல்லாமல் நடந்து கொண்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட அரியானூர் பகுதியில் அதிமுகவினர், மின் கட்டண உயர் வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனு மதி பெறாமல் சாலையில் பள்ளங்கள் தோண்டி ராட்சத கொடி கம்பங்களை அதிமுகவினர் நட்டுள்ளனர். திருச்செங்கோடு பிரதான சாலையில் இந்த கம்பங்களை பாதுகாப்பில்லாமல் நடப்பட்டுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது, அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், பிற கட்சி யினரை கொச்சைப்படுத்தும் விதமாக ஒருமையில் பேசியது பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. மேலும், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பிர தான சாலையில் உயரமான கொடிகளை நட்டு போக்குவரத் திற்கும், பொதுமக்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.