districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அதிமுக நிர்வாகிக்கு வெட்டு: கைது

கோவை, அக்.9- அதிமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய மாண வன் உள்ளிட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகராட்சியின் 92 ஆவது வார்டு அதிமுக செயலாளராக பணியாற்றி வருபவர்  ராஜா. குனியமுத் தூர் பகுதியில் வசித்து வரும் இவர். கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு, குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா போதை யில் இருந்துள்ளனர். இதனை பார்த்த ராஜா மாணவர் களை திட்டி விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த முன்னாள் மாணவரான கோபிநாத் தனது நண்பர்களுடன் வந்து ராஜாவை மிரட்டி உள் ளார். இதை தொடர்ந்து மற்றொரு கொலை முயற்சி வழக்கில் கோபிநாத் கைது செய்யப்பட்டு உள்ளார். இந் நிலையில், செவ்வாயன்று ராஜா குனியமுத்தூர் பகுதி யில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதே கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் தனது நண்பரான பூமிநாதன் என்பவருடன் ராஜாவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது டன் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த அரி வாளால் ராஜாவை வெட்டி உள்ளார். அப்போது, அதனை தடுக்க முற்பட்ட ராஜாவின் இரு கைகளிலும் சரமாரியாக வெட்டு விழவே உடனடியாக இருவரும் அங்கு இருந்து தப்பியோடி உள்ளனர். இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் குனியமுத்தூர் காவல்துறை யினர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த னர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை  சேகரித்து அதனடிப்படையில் தலைமறைவாக இருந்த இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் போராட்டம்

கோவை, அக்.9- பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு ஊதியம். அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர். ஊர்புற நூலகர், எம்ஆர்பி  செவிலியர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம்,  சட்ட பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தர்ணாவில் வலியுறுத்தப்பட்டது. இப் போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் எஸ்.ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மதன் உள்ளிட் டோர் உரையாற்றினர். முடிவில், எஸ்.எம்‌.வேலுமணி  நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தர்ணாவிற்கு, மாவட்டத் தலைவர் ஏ.ராக்கி முத்து தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆர்.சுமதி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சு.விஜய மனோகரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். அரசு  ஊழியர் சங்க மேனாள் மாநிலத் தலைவர்  கே.ராஜ்குமார் நிறைவுரையாற்றினார். இதில் பலர் பங்கேற்றனர்.

மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

சேலம், அக்.9- மேட்டூர் அருகே மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம்  உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ள னர். சேலம் மாவட்டம், மேட்டூர் வனச்சரகத்துக்குட்பட்ட காப்புகாடு கிராமத்தில் கடந்த சில வாரங்களாக இரண்டு  சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள்  கூறிவந்தனர். மேட்டூர்- மைசூரு சாலையில் காவலர் பயிற்சிப்பள்ளி அருகே இரவில் சுமார் 8 மணி அளவில் சாலையைக் கடந்து சென்ற இரண்டு சிறுத்தைகளை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர். மேலும், கிராமத்தில் இருந்த 6 நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடி உள் ளன. இந்நிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் ஜான்ஜெயபால் வீட்டருகே சிறுத்தை உறுமல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத் துறையினர் இரவில் கிராம மக்கள் வீடுகளை விட்டு  வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே, மேட்டூர் அருகே பல வாரங்களாக பொதுமக் களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கொல்லப்பட்ட நிலை யில், தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்ப தால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புக்கிங் முறையில் கைதிகளை பார்க்கும் திட்டம்

சேலம், அக்.9- சேலம் மத்திய சிறையில் புக்கிங் முறை யில் கைதிகளை பார்க்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் நாளில், 155 பேருக்கு கைதிகளை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இதில் உள்ள  கைதிகளை சந்திக்க  வரும் உறவினர்கள் நீண்ட நேரம் காத்தி ருக்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்யும் முறை அமல்படுத்தப் பட்டு வருகிறது. சேலம் மத்திய சிறையில் செவ் வாயன்று இந்த திட்டம் அறிமுகம் செய்யப் பட்டது. தொடர்ந்து அன்றைய தினம் நிலவரப்படி, 326 தண்டனை கைதிகள், 870 விசாரணை கைதிகள், 65 குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் என மொத்தம் 1,261 கைதி கள் உள்ளனர். இவர்களை உறவினர்கள் நண்பர்கள் சந்திக்க முன்பதிவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.   கைதி ஒருவரை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு முதல் நாளே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத் துக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகவே சிறை யில் நுழைவாயிலுக்கு வந்து விட வேண்டும்.  இதற்காக பிரத்தியோக முன்பதிவு எண் கள் வழங்கப்பட்டுள்ளன. காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை 10 பிரிவுகளாக  நேர்காணல் நடத்தப்படும். இந்தத் திட்டத்தில்  155 பேர் முன்பதிவு செய்து கைதிகளை பார்த்து சென்றனர்.    இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறியதா வது, இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள தால் கைதிகளை பார்க்க வருபவர்கள் காத்தி ருக்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. முதற்கட்ட மாக மத்திய சிறைகளில் அமல்படுத்தப்பட் டுள்ள இந்தத் திட்டம் விரைவில் மாவட்ட கிளை சிறைகளிலும் அமல்படுத்தப்படும், என்றனர்.

ஆன்லைன் விற்பனையை தடை செய்க: பட்டாசு சிறு வியாபாரிகள் கோரிக்கை

கோவை, அக்.9- ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை  செய்ய வேண்டும் என கோவை மாவட்ட பட்டாசு விற் பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தி னர் செய்தியாளர்களை செவ்வாயன்று சந்தித்தனர். இச் சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்பு கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப் போது பேசிய அவர்கள், ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தும் ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனால், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.  ஆன்லைன் விற்பனையால் அரசிற்கு எந்த லாபமும் இல்லை. ஆன்லைன் விற்பனையை அரசு தடை செய்ய வேண் டும். ஆன்லைன் மூலம் பட்டாசுகளை ஆர்டர் செய்யும் பொழுது பாதுகாப்பில்லாமல் வழக்கமான ட்ரான்ஸ்போர்ட் வாகனங்களிலோ, கார்களிலோ எடுத்து வருகின்றனர். மேலும், தள்ளுபடி என்ற பெயரில் தரம் இல்லாத பட்டாசு களை விற்பனை செய்கின்றனர். ஆன்லைனில் போலி விளம் பரங்களை கொடுத்து தரம் இல்லாத பட்டாசுகளை விற் பனை செய்கின்றனர். சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்கின்றனர். இது போன்று விற் பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் தருவதில்லை. இதனால், பட்டாசுகளை வாங்கி கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்க வும் முடியாது. முறையான உற்பத்தி உரிமம் இல்லாத கம் பெனியினர் ஜிஎஸ்டி கட்டாதவர்கள் தான் இது போன்ற வேலைகளை செய்கின்றனர். எனவே அரசு இதனை கவ னத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  மேலும், வியாபார உரிமம் 10 நாட்களுக்கு மட்டுமே வழங் கப்படும் நிலையில், அதனை 15 நாட்களாக நீட்டித்து தர வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை யும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும்,  பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து  நோட்டீஸ் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

வெடி விபத்து: நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், அக்.9- வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோ ருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது, திருப்பூர் பாண்டி யன் நகர் பகுதியில் செவ்வாயன்று ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் மூன்று  பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஆறு வயது பெண் குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் புத னன்று இறந்துள்ளது. உழைப்பாளி மக்கள் நெருக்கமாக வாழும் குடியி ருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த வெடி  விபத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் மற் றும் பொருட்கள் சேதம் அடைந்துள் ளன. எனவே இப்பகுதியில் காயம டைந்த, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு மையான சிகிச்சை வழங்கவும், வீடு கள், உடமைகள் இழந்தவர்களுக்கு உரிய முழுமையான நிவாரணம் வழங்க வும் அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இந்த விபத்து நடைபெற்ற இடத் தில், நாட்டு வெடி குண்டு தயாரிப்ப தற்கு பயன்படுத்தக்கூடிய பல கிலோ கிராம் ரசாயனங்களை காவல்துறையி னர் கைப்பற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் ஆபத்தான வெடி பொருட்கள் பெருமளவு வைத்து நாட்டு வெடி குண்டு தயாரித்தது அதிர்ச்சி அளிப்ப தாக உள்ளது. அரசு நிர்வாகம், காவல் துறையின் கண்காணிப்பில் குறைபாடு இருப்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.  ஏற்கனவே குவாரிகளில் பயன்படுத் தக்கூடிய வெடி மருந்து பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிக மாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு  தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதி களில் அதிக அளவு வெடிபொருட்களை குவாரிகளில் பயன்படுத்துவதால் நில  அதிர்வு போன்ற பாதிப்புகளை அந்த  வட்டாரங்களில் மக்கள் உணர்ந்துள்ள னர். அரசின் அனுமதி பெற்று விற்கப் பட வேண்டிய வெடி பொருட்கள், ரசா யனம் தாராளமாக கிடைப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவ தாக பாண்டியன் நகர் வெடி விபத்து உள் ளது. எனவே தமிழக அரசு, காவல்துறை முறையான தீவிர கண்காணிப்பு, சட்டப் படி உறுதியான நடவடிக்கை மேற் கொண்டு இனி, இது போன்ற சம்ப வங்கள் நடைபெறாமல் தடுக்க வேண் டும் என தெரிவித்துள்ளார்.

நடனமாடி மாற்றுத்திறனாளிகள் உலக சாதனை

சேலம், அக்.9- சேலத்தில் 600க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஒரே இடத்தில் இசைக்கேற்ப நடனமாடி உலக சாதனை படைத்தனர். சேலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங் கள் சார்பில், ‘உங்கள் வழியில் பறக்க’ என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில், சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீண் குமார் அபிநபு சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். இதில் 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவ, மாணவி கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பல்வேறு சினிமா பாடல்களுக்கு நடனமா டினர். இதனை ஜேக் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவினர் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்து, அதற்கான சான்றிதழை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் வழங்கி னர். தொடர்ந்து, இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறன் மாணவ, மாணவி களுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப் பட்டன. மேலும், மாற்றுத்திறன் மாணவர் களை பெற்றோர், ஆசிரியர்கள், பொது மக்கள் எப்படி கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. 

டிராக்டர் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி

கோவை, அக்.9- சூலூர் அருகே மாட்டுச் சாணம் ஏற்றிச் சென்ற டிராக்டர் பிஏபி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே மலைப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பிக்குளத்தைச் சேர்ந்த மந்திராச்சலம் என்பவர் தனது தோட்டத்தில் வளர்க்கும் மாடுகளின் சாணத்தை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு உர மாக கொடுத்து வருகிறார். இந்நிலையில், திங்களன்று குப் பன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டரில் சாணத்தை ஏற்றிச்  சென்றுள்ளார். டிராக்டரில் வீரன், மணிகண்டன், தங்கராஜ் ஆகிய 3 கூலித் தொழிலாளிகள் உடன் சென்றுள்ளனர். தோட் டத்தில் இருந்து மேட்டுப்பகுதியில் டிராக்டர் மேல்நோக்கி சென்றபோது, நிலை தடுமாறி பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த வர்களில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீரில் மூழ்கி உயிரிழந்த மணிகண்டனின் சடலம் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டது. வாய்க்காலில் விழுந்த குப்பன் மற்றும் வீரன் ஆகிய இருவரும் நீந்தி தப்பியுள்ளனர். தகவ லின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சுல்தான்பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உயி ரிழந்த தங்கராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வாய்க்காலில் இருந்து டிராக்டரை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் மணிகண்டனின் சடலத்தை தேடும் பணி யில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப்பள்ளி முன்பு தேங்கிய மழைநீர்

சேலம், அக்.9- ஓமலூர் அருகே உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் குளம்போல மழைநீர் தேங்கி நின்ற நிலையில், பெற் றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சர்க்கரை செட்டிப்பட்டி கிராமம், வேங்கானூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்க ளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், ஓமலூர் சுற்றுவட் டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், இப்பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும், பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி யதால் பள்ளிக்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வரு கின்றனா். இந்தப்பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட் டுள்ளது. ஆனால், பள்ளி வளாகம் பள்ளமாக இருப்பதாலும், தண்ணீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளதாலும், மழை பெய்யும்போது பள்ளி மைதானம், பள்ளி  நுழைவாயில் முன்பு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ, உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளோ நடவ டிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை மற்றம் கல்வித்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.