நாமக்கல், ஜன.10- நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 5,43,076 குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திங்களன்று வழங்கப் பட்டது. தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு-2023 வழங்கும் விழா நாமக்கல் மாவட்டத்தில் 5,43,076 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000, ஒரு முழுக் கரும்பும் சேர்த்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நாமக்கல் - முல்லை நகர் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கேஆர்என்.ராஜேஷ்குமார் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். நிகழ்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.