districts

img

பணிமாறுதலில் அரசின் விதிமுறைகள் மீறல் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 12- தோட்டக்கலைத்துறையில் அமைச்சு பணியாளர்களின் பணிமாறுதலில் அரசின் விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படுவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி தோட்டக்கலைத்துறை இயக்கு நர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு அமைச்சு பணியாளர்கள் சங்கத் தின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்ட செயலாளர் வி.கே.ரேகா உரையாற்றினார். இதில், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க தருமபுரி மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட துணைத்தலைவர் சி.காவேரி, மாவட்ட மக ளிர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இள வேனில், வட்ட செயலாளர் எம்.குமரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை தோட்டக்கலைத்துறை இயக்குநர் அலுவலகத்தில், அமைச்சு பணியாளர்கள்  பணி மாறுதல்களில் தொடர்ந்து விதிமுறை கள் மீறப்படுகிறது. எந்த முன்னுரிமையையும்  நடைமுறைப்படுத்துவதில்லை. அரசாணை  எண்.10, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்தி ருத்ததுறை நாள் 07.01.1992 மற்றும் அதனைத் ொடர்ந்து வரப்பெற்றுள்ள அரசின் தெளிவு ரைகளில், குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிப்பதில்லை. இதனால், பலர் பாதிக் கப்படுகின்றனர். இது குறித்து பலமுறை  முறையிட்டும் பயனில்லை. தற்போது கண் காணிப்பாளர் காலிப்பணியிடத்திற்குகூட பலர் விண்ணப்பித்திருந்தும், முன்னுரிமைப் படி அவர்களுக்கு மாறுதல் வழங்காமல், காத்திருந்து, பதவி உயர்வு ஒதுக்கீடு வந்த  பிறகு அதிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள் ளது. இது அரசின் விதிமுறைகளை மீறியதா கும். எனவே, தோட்டக்கலைத்துறை இயக்கு நர் அலுவலகத்தில், அமைச்சுப்பணியாளர்க ளின், மாறுதல்களில் தொடர்ந்து அரசின் விதி முறைகள் மீறப்படுவதை, உரிய விசாரணை செய்து, இதற்கு காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சுப்பணி யாளர்கள் மாறுதல் நியமனத்தில் அரசின் விதி முறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் சி.அண்ணாதுரை நன்றி கூறினார்.