தருமபுரி, ஜூலை 12- கல்குவாரிகளால் விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாகவும், கல்குவாரிகளின் செயல்பாடுகளை தடுத்த நிறுத்த வேண்டும் என சூடனூர் ஊராட்சி பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் பாலக் கோடு அடுத்த சூடனூர் ஊராட்சி யில் சூடனூர், சூடனூர் காலனி, எம்ஜிஆர் நகர், சாத்தன கொட்டாய், கூலிக்கனூர், காமராஜ் நகர், எக் காண்டஅள்ளி, செட்டிப்பட்டி, நாக னூர், செட்டிப்பட்டி கூட்ரோடு, கலைஞர் நகர் உள்ளிட்ட 12 கிரா மங்கள் உள்ளது. இந்த 12 கிராமங் களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு முக் கிய ஆதாரமாக இருந்து வருவது விவசாயம். இந்நிலையில், இப் பகுதி கல்குவாரிகளால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் படுவதாக புகார் தெரிவித்த னர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியி டம் கொடுத்த மனுவில், விவசாயம் மற்றும் கால்நடைகளை நம்பியே இங்குள்ள பொதுமக்கள் வாழ்ந்து வருகிறோம். அனைவரது வீடுகளி லும் கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளை அருகாமையில் உள்ள பெரிய கரடு உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு மேச்சலுக்கு ஓட்டிச் சென்று வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். இந்த காடு களை அழித்து 300 அடி ஆழத்திற் கும் மேல் கனிம வளங்களை வெட்டி எடுப்பதால் நீர் வளம் அனைத்தும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய கிணறுகள் வறண்டு போய், குடிநீருக்கு பஞ் சம் ஏற்பட்டுள்ளது. விவசாயம் பெரி தும் பாதிப்படைந்துள்ளது. 30 அடி யில் இருந்த நீர்மட்டம் 1000 அடிக்கு கீழ் சென்று விட்டதால், எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. சூடனூர் பகுதியில் மேற்கு புறத்தில் புதியதாக தற்பொழுது அரசாங் கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கல்கு வாரி என்று மூன்று மாதமாக மலையை உடைத்து கிரானைட் கற்களை பெயர்த்து கனரக லாரி களில் எடுத்துச் செல்கின்றனர். அதேபோல் காமராஜர் நகர் பகுதியில் ஒரு வருடமாக மலையை குடைந்து கனிம வளத்தை நாள் ஒன் றிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரி களில் எடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர். ஊராட்சியின் நான்கு புறங்களிலும் கனிம வளத்தை வெடிவைத்து தகர்த்து எறிவதால் வனப்பகுதியில் உள்ள விலங்கு கள் கிராமங்களில் புகுந்து அச் சத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பயந்து வாழும் சூழல் ஏற்பட்டுள் ளது. இந்த கல்குவாரியால் முற்றி லும் 12 கிராமங்களின் வாழ்வாதா ரம் கேள்விக்குறியாக உள்ளது. சூட னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் மக்களின் அனுமதியின்றி இது போன்ற காரியங்களில் அரசோ, தனியார் நிறுவனங்களோ தன்னிச் சையாக செயல்படக் கூடாது என்று பஞ்சாயத்துராஜ் அறிவுறுத்தியுள் ளது. இருப்பினும் சில அதிகாரி கள் பஞ்சாயத்து தலைவர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு அனுமதியளிக்கின்றனர். அரசுக்கு எதிராகவும் பொது மக்க ளுக்கு பாதகமாகவும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற மக்கள் விரோத செயலை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு தடுத்து நிறுத்துவதோடு, உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், 12 கிராமங்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு சூட னூர் கிராமத்தில் நான்கு புறமும் செயல்படும் கல் குவாரிகளை தடுத்து நிறுத்தி எங்கள் வாழ்வாதா ரத்தை மீட்டுக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையேல் 12 கிராம மக்களும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம், என் றனர்.