districts

img

ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு விவசாயத் தொழிலாளர்கள் எதிர்ப்பு

ஈரோடு, செப்.25- கவுந்தப்பாடி ஊராட்சியை  பேரூராட்சியாக மாற்றக்கூடாது என  வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழி லாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திரண்டு மனு அளித்த னர். ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கவுந்தப்பாடி கிராம ஊராட்சி உள் ளது. இங்கு சுமார் 6000 விவசாயத் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை அட்டை பெற்றுள்ளனர். இந் நிலையில் இந்த கிராம ஊராட்சியை  பேரூராட்சியாக தரம் உயர்த்தப் படும் எனக் கூறப்படுகிறது. இத னால் பாதிக்கப்படும் விவசாய தொழி லாளர்கள், தங்களது கிராம ஊராட் சியை பேரூராட்சியாக மாற்றக் கூடாது என வலியுறுத்து மாவட்ட  ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த னர். அப்போது வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி உயர்வில் இருந்து  தங்களை விடுபடும் வகையில் பேரூராட்சியாக மாற்றும் முடிவை கை விட வேண்டும். முன்னதாக கொங்கு கலையரங்கம் பகுதியில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் ஆட்சி யரகம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்த னர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ். சுப்ரமணியன் மற்றும் அகில இந் திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். மாணிக்கம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.