ஈரோடு, டிச. 10- புளியம்பட்டி நகராட்சியில் அகற்றப்பட்ட மாட்டிறைச்சிக் கூடங்கள் மூன்று மாதங்களுக் குள் அமைக்கப்படும் என ஒப்பந்த மாகியுள்ளது. புளியம்பட்டி நக ராட்சி ஆணையர் சர்வாதிகரமாக சந்தையில் இருந்த மாட்டிறைச்சிக் கடையை அகற்றிய நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணி போராட் டத்தை அறிவித்திருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் வட்டம், புளியம்பட்டி வாரச்சந்தையில் மாட்டிறைச்சி கடைகள் பல ஆண்டுகளாக செயல் பட்டு வந்தது. கடந்த மாதம் திடீரென நகராட்சி ஆணையர் கடை உரிமை யாளர்களுக்கு எவ்விதமான நோட் டீசும், முன்னறிவிப்பும் கொடுக் காமல் இடித்து அகற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். அத்துடன் இப்பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வாக மாட்டி றைச்சி கூடம் (Slaughter house) கட்ட வேண்டும் என்றும், அது வரை தற்காலிகமாக இறைச்சி கடை வைத்துக் கொள்ள அனுமதி வழங்க கேட்டு தமிழக அரசுக்கும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் புளியம்பட்டி நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் முறையீடு செய்யப் பட்டது. மேலும், கோரிக்கையை வலியுறுத்தி 12.12.2022 அன்று ஒரு முதல் தொடர் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சனியன்று பேச்சுவார்த்தை நடத்த வருமாறு நகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்தார். அதன்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள கடைகளை நோட்டீஸ் ஏதும் கொடுக்காமல் அகற்றியது சட்டவிரோதமானது என்று சிபிஎம் மற்றும் ததீஒமு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர தீர்வாக மேற் கண்ட வாரச்சந்தையில் மாட்டி றைச்சி கூடம் (Slaughter house) கட்ட வேண்டும் என்றும், அதுவரை கடைகள் நடத்தி கொள்ள அனும திக்க வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது. நிரந்தர தீர்வாக இறைச்சி கூடம் கட்ட நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மூன்று மாதங்க ளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ததீஒமுஉள்ளிட்ட அமைப்புகளும் புளியம்பட்டி நகராட்சியில் மாட்டி றைச்சி கூடம் நிரந்தரமாக அமையும் வகையில் மூன்று மாத காலத்தில் மாட்டிறைச்சி கூடம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் மா.அண்ணா துரை,ஜெகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி சாகர் ஒன்றிய கமிட்டி செய லாளர் டி.சுப்பிரமணியன், காந்தி நகர் கட்சி கிளை செயலாளர் பி.என். ராஜேந்திரன், செந்தில்ராஜ் மற்றும் கறிக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.