தாராபுரம், டிச. 14- சென்னையில் பெய்த கனமழை கார ணமாக சென்னைக்கு செல்ல வேண்டிய இள நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் வேத னையடைந்துள்ளனர். தாராபுரம், பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சென்னைக்கு இளநீர் லாரிகள் மூலம் லோடு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கொண்டு செல் லப்படும் இளநீர் சென்னையின் பல பகு திகளில் விற்பனை செய்யப்படும். தாராபு ரம், பொன்னாபுரம், நாரணாபுரம், கோவிந்தா புரம், கொட்டமுத்தம்பாளையம், தாசர்பட்டி, திப்பம்பட்டி, ஏரிப்பட்டி, பூசாரிபட்டி, குடி மங்கலம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதி களில் தென்னை சாகுபடி அதிகமாக நடைபெ றும். மேலும் இந்த ஊர்களுக்கு சென் னையை சேர்ந்த வியாபாரிகள் சென்னை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல விவசாயி களிடம் இளநீர் விலை பேசி முன் தொகை கொடுத்திருந்தனர். இந்நிலையில், சென்னை யில் பெய்த மழையின் காரணமாக இளநீர் எடுத்து செல்ல முடியாத நிலையில் வியா பாரிகள் உள்ளனர். இதன் காரணமாக தாராபுரம் பகுதியில் சென்னைக்கு அனுப்ப வெட்டிய சுமார் ஒரு லட்சம் இளநீர் தேக்கமடைந்துள்ளன. கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட மற்ற பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு மரத்தில் இருந்து வெட்டிய இளநீரை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் 40 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய சென்னை வியாபாரிகள் முன்தொகை கொடுத்த நிலை யில் தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு வியாபாரிகள் சீதேஷ்ண நிலை காரண மாக வியாபாரம் மந்தமாக இருப்பதாக கூறி ரூபாய் 22 க்கு இளநீர் கேட்பதால் விவசா யிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் இளநீர் வெட்டி எடுக்காமல் தென்னைம ரத்தில் விட்ருந்தால் தேங்காயாக முற்ற வைத்து விற்று இருக்கலாம். இருப்பு வைத் தால் அழுகிவிடும் அபாயம் உள்ளது. எனவே தற்போது சென்னையில் வியாபாரிக ளுக்காக வெட்டி எடுத்த இளநீரை வந்த விலைக்கு விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள தாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ள னர்.