திருப்பூர், ஜூன் 27- விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த தேங்காய் கரி தொட்டி ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குள்ளம்பாளையம் பகுதி மக்கள் புதனன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நி லையில் வியாழனன்று பல்லடம் வட் டாட்சியர் தேங்காய் கரி தொட்டி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட னர். பொங்கலூர் ஒன்றியம், வாவிபா ளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் பகுதியில் தேங்காய் கரி தொட்டி சுடும் ஆலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இயங்கி வந்தது. மாசுக்கட்டுப் பாட்டு வாரிய விதிமுறைகளை பின் பற்றாமல் இயங்கி வந்த இந்த ஆலை யால் சுற்றுச்சூழல் மாசு, நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, தேங்காய் கரி தொட்டி சுடும் ஆலை இயக்கம் நிறுத்திவைக்கப் பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த ஆலை இயங்கி வருவதாகவும், உட னடியாக நிறுத்த வேண்டும் என கோரி கிராம மக்கள் பல்லடம் ஜமாபந்தி யில் மனு அளித்தனர். பின்னர், தேங் காய் கரி தொட்டி ஆலையை நிரந்தர மாக மூட வேண்டும் வலியுறுத்தியும், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட் டோம் என கூறி வட்டாட்சியர் அலுவ லக அறையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை, ஊரக உள்ளாட்சித் துறை, மாசுக்கட்டுப் பாட்டு வாரியம், காவல்துறை ஆகிய துறையினர் சம்பந்தப்பட்ட ஆலை யில் வியாழக்கிழமை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்படி பல்லடம் வட்டாட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக் கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதிமீறி ஆலை இயங்கியது கண்டறியப்பட்டது. மேலும், ஆலை தொடர்ந்து இயக்க கூடாது எனவும், முறையான அனுமதி பெற வேண் டும். அனுமதி பெறாமல் ஆலையை இயக்கினால் அரசு உரிய நட வடிக்கை எடுக்கும் என ஆலை நிர்வா கத்திடம் தெரிவித்துள்ளார்.