districts

ராசிபுரம்: 20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி தொற்று

நாமக்கல், மார்ச் 25- ராசிபுரம் அருகே செயல்பட்டு வரும்  பண்ணையில் 20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலை யில், அவற்றை அழித்து புதைக்க அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே  உள்ள கல்லாங்குளம் என்ற இடத்தில் ராஜா மணி என்பவர் கடந்த சில வருடங்களாக வெண்பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது பண்ணையில் வளர்க்கப் பட்ட 2 பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உயிரிழந்தது. இதனைத்தொ டர்ந்து நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத் துவக்கல்லூரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற மருத்துவக்குழுவினர் அவற் றின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்த னர். ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்கன் வைரஸ் தாக்கி பன்றி உயிரிழந்தது உறுதி செய்யப் பட்டது. இந்நிலையில், அந்த பண்ணையில் சனியன்று கால்நடை பராமரிப்பு துறை அதி காரிகள் ஆய்வு செய்தனர். அங்கு குட்டிகள்  உட்பட 20 பன்றிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்துள்ளதால், அவற்றை 15 அடி  ஆழம் குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும், 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் பாஸ்கர் தெரிவித் துள்ளார். ராசிபுரம் பண்ணையில் பன்றிக ளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் உறுதி செய்யப் பட்டதால், அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றி களிலிருந்து மனிதர்களுக்கோ, மாடு, ஆடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கோ பர வாது. ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும். எனவே விவசாயிகள், பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எவ்வித பீதியும் அடைய தேவை யில்லை. மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்பொழுது அதுகுறித்து தீவிர விசாரணை செய்யவும், நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோயானது பன்றிகளில் இருந்து பன்றிகளுக்கும், நோய் தாக்கப்பட்ட பகுதி களிலிருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப்பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட் டுமே பரவக்கூடியதாகும். இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாதலால் தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்த மாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவை கொண்ட நடைபாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித் தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் அந்நியர்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப் படுத்தலாம், என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, 20 பன்றிகளை மட்டும் காட்டி விட்டு 300க்கும் மேற்பட்ட பன்றிகளை விவ சாய நிலத்தில் பண்ணை உரிமையாளர் மறைத்து வைத்துள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுகு றித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், பண்ணை உரிமையாளர் அதிகாரிகள் ஆய் வுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்ததால் பண்ணையில் 20 பன்றிகளை வைத்துவிட்டு மீதமுள்ள 300 க்கு மேற்பட்ட பன்றிகளை உற வினர் விவசாய தோட்டத்தில் மறைத்து வைத் துள்ளனர். விவசாய தோட்டத்தின் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் கிராம மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது, என்றார். இதுகுறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டபோது - அதிகாரிகளுடன் சென்று பன்றி பண்ணையில் ஆய்வு செய்ததாகவும் அங்கு 20 பன்றிகள் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிக ளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.