சூலூர், ஜூன் 1- கருமத்தம்பட்டி அருகே தனி யார் நிறுவனத்தின் ராட்சத விளம் பர பேனர் பொருத்தும் பணியின் போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து விபத்துக் குள்ளானதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படு காயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், கருமத்தம் பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ் சாலையை ஒட்டி, ராமசாமி என் பவரது இடத்தில் ராட்சத பேனர் கள் வைக்கும் பணி வியாழனன்று நடைபெற்று வந்தது. இப்பணியை சேலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ள தாக சொல்லப்படுகிறது. இந்தப் பணியினை சேலத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பேனர் கட்டு மான பணியின் போது பலத்த காற் றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள் ளானது. இதில் குமார், குணசேக ரன், சேகர் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் பேனர் களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப் பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கரு மத்தம்பட்டி போலீசார் தலைமறை வாக உள்ள ஒப்பந்ததாரர் பழனிச் சாமியை தேடி வருகின்றனர்.