திருப்பூர், நவ. 17 - திருப்பூர் சகோதயா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பாக அத்வைதா பள்ளியில் நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதி யில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் திருப் பூர் பகுதியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கலந்து கொண்டன. 14 வயதுக்கு உட்பட்டோர் கூடைப்பந்து போட்டியில், காங்கயம் ரோட்டில் உள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர். குழந்தை கள் தினவிழாவில் இம்மாணவர்களை பள்ளி தாளாளர் விஷ்ணு பழனிச்சாமி, பள்ளி முதல்வர் ஹரிஹரசுதன் ஆகி யோர் பாராட்டி பேசினர்.