சேலம், ஜன.31- விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஒன் றிய பாஜக அரசை கண்டித்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திங்க ளன்று துரோக நாள் அனுசரிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓராண்டுக்கு முன்பாக விவசாயிகள் மீது விரோத போக்கில் ஈடுபட்ட ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித் தும், விவசாயிகளின் நலனுக்கு எதிரான வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் வெற்றியடைந்தது. அதனைத்தொடர்ந்து குறைந்த பட்ச ஆதார விலை உறுதி சட்டம், மின்சார மசோதாவை திரும்ப பெறுதல், போராட்டத்தில் உயிர்நீத்த 700க்கும் மேற் பட்ட விவசாயிகளுக்கு நினைவிடம் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என மோடி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், அவற்றை தற்போது வரை நிறைவேற்றாமல் துரோகம் செய்து வருவதாகவும் உடனடியாக அறிவித்த வாக் குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என நாடு தழுவிய அளவில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் துரோக நாள் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஏ.ராமமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில துணைத் தலைவர் எம்.லகுமையா, எஸ்கேஎம் மாநில செயற்பாட்டு குழு உறுப்பினர் ஏ.சந்திரமோகன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பி. தங்கவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.பொன்னுசாமி, ஏஐகே கேஎம்எஸ் மாவட்ட செயலாளர் ஆர்.நட ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.கே.செல்வராஜ், மாவட்ட தலைவர் எம்.சின்னசாமி, ஏஐ கேஎம் மாவட்ட செயலாளர் வி.அய்யந் துரை, ஐக்கிய விவசாயிகள் சங்க நிர்வாகி சங்கரையா உள்ளிட்ட திரளான விவசாயி கள் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி. கணேஷ் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பி.வாசுதேவன், சிஐடியு தலை வர் கே.மாரப்பன், க.இரா.திருத்தணிகா சலம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டற் திற்கு ஆர்.மாணிக்கம் தலைமை வகித் தார். இதில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.முனு சாமி, என்.வேலுச்சாமி, கரும்பு விவசாய சங்க நிர்வாகி பி.கார்த்திகேயன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.