districts

img

ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்க

கோவை, செப். 7- ஒன்றிய நிதி அமைச்சர் கோவை  வருகையின்போது சிறுகுறு தொழிற்கூடங்களை பார்வை யிட்டு, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏற் பட்டுள்ள இடர்களை களைந்து தீர்வு காண வேண்டும் என கோவை  மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத் துள்ளது. கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (FOCIA) கூட்டம் சனியன்று கௌமா அலுவலகத்தில் ஒருங் கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், நட ராஜ், ரவீந்திரன் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோவை மாநக ராட்சியிலிருந்து ஆய்வுக்கு வரு கின்ற அதிகாரிகள், தொழில் வரி, குப்பை வரி என தங்களுக்கு என்ன  தோன்றுகிறதோ அந்தத் தொகையை செலுத்தச் சொல் கின்றனர். குறு, சிறு தொழில் கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், அதிகா ரிகளின் இந்த நடவடிக்கை தொழில் துறையினர் மத்தியிலே விரக் தியை ஏற்படுத்துகிறது. கோவை மாநகராட்சி ஆணையர் குறு,சிறு  தொழில் முனைவோர் சங்கப் பிரதி நிதிகளை அழைத்து வரி விதிப் புயை முறைப்படுத்திட வேண்டும். இதேபோன்று, கோவை மண்டலத் துக்குட்பட்ட தமிழ்நாடு மின்சார  வாரியம் கடந்த ஒரு மாத காலமாக  குறுந்தொழில் தொழிற்சாலைக ளில் மின் கணக்கிடுகின்ற பொழுது  power factor க்கான அபாராத விதிப்பு, பயன்படுத்தும் கட்டணத் துக்கு இணையாக அபராத தொகை வசூல் செய்கின்றனர். மின் சார வாரியத்தின் இந்த அதிரடி நடவ டிக்கை குறு, சிறு தொழில் துறை யினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஏற்கனவே மின் கட்டண  உயர்வு, நிலை கட்டண உயர்வால்  தவித்து வரும் தொழில்துறையினர் மேல் பேரிடியாக அபராத விதிப்பு  உள்ளது. எனவே, அபராத விதிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்சனை சம் பந்தமாக மாவட்ட மின் தலைமை பொறியாளர், கோவை தொழில் அமைப்புகளை அழைத்து பேசி அபராத விதிப்புயை தவிர்த்து  தொழில்துறையினருக்கு உதவு கின்ற வகையில் உரிய வழி காட்ட  வேண்டும். வருகின்ற 11ஆம் தேதி  கோவைக்கு வருகை தர உள்ள  ஒன்றிய நிதியமைச்சர் குறு, சிறு  தொழில் கூடங்களை பார்வையிட  வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பா லும், ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனை களையும் ஜாப் ஆர்டர்கள் செய் கின்ற தொழில் முனைவோர்களை  நேரடியாக சந்தித்து வரிவிதிப் பில் உள்ள இடர்களை கேட்டறிய  வேண்டும். குறு, சிறு தொழிலுக்கு  உள்ள பாதிப்புகளை போக்குவ தற்கு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும், வங்கி கடன்  பெறும் தொழில் முனைவோர்கள்  தொடர்ச்சியாக தொழில் நெருக்கடி யால் 90 நாட்கள் கடனுக்கான தவணை தொகை கட்ட தவறினால்  வங்கிகள் கடுமையான சர்பாஸ் சட் டத்தை பயன்படுத்தி தொழில்  முனைவோர்களின் சொத்துக் களை பறிமுதல் செய்வதும் தொழில்களை முடக்கும் நடவ டிகையால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மத்திய நிதி யமைச்சர் சர்ப்பாஸ் சட்ட நடவ டிக்கையை ஏற்கனவே இருந்தது போல்180 நாட்களாக மாற்ற வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  இக்கூட்டத்தில் சங்கத்தின் நிர் வாகிகள் சுருளிவேல், சிவசண்முக  குமார்,  சாகுல் ஹமீது, பாண்டியன்,  எம்எஸ்எம்இ மணி உள்ளிட்ட  தொழில் அமைப்புகளின் பிரதிநிதி கள் பங்கேற்றனர்.