districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் அடாவடி லாரி உரிமையாளர் சம்மேளனம் மனு

சேலம், ஜன.23- ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் தவறாக அபரா தம் விதிப்பதை முறைப்படுத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லாரி உரிமையா ளர் சம்மேளன  சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில்  மாநிலத் தலைவர் தன்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத் தில் கனரக வாகனம் உள்ளிட்ட அனைத்து விதமான லாரிகள் லட்ச கணக்கில் இயங்குகிறது. இந்த நிலையில்  வாகனங்க ளுக்கு அபராதம் என்ற பெயரில் சாலையோரம் பெட்ரோல்  பங்க் பார்க்கில் நிறுத்தப்பட்டிருக்கும்  வாகன எண்களை வைத்து மட்டும் ஆன்லைன் அபராதம்  விதிக்கிறார்கள். இத னால், லாரிக்கு அபராத காரணம் பார்த்தால் தலைகவசம் அணியாமல் சென்றதாகவும், சீட் பெல்ட் அணியாமல் சென்ற தாக என அபராதம் செலுத்தும் நிலை உள்ளது. குறிப்பாக 1500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த  வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காரணமே இல்லாமல் அபரா தம் செலுத்தும், இந்த முரண்பாடுகளை கலைய நேரடியாக ஆய்வு செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், முரண்பாடு களான அபராதத்தினால் பண நட்டம் அடைவதுடன், தொழில்  பாதிக்கப்படுகிறது. இதனால், லாரிகளை இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வு, இன்சூ ரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் லாரி உரிமை யாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேலை யில் ஆன்லைன் அபராதத்தால், மேலும் பல சிக்கல்களை சந் திக்க வேண்டி உள்ளது. எனவே காவல்துறையினர் உடனடி யாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தவறாக பதியப்படும் ஆன்லைன் அபராதத்தை தடுத்திட வேண்டும் என மனு அளித் துள்ளதாகவும், இதனை முறைப்படுத்தாவிட்டால், அடுத்த கட்டமாக லாரி உரிமையாளர் சங்கம் கூட்டம் கூட்டி வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். தருமபுரி இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாட்டு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இதில், தமிழ் நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்  தமிழ்நாடு வடக்கு மண்டல துணை தலைவர் நாட்டாண் மாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைக்கவசம் அணியாத அரசு ஊழியருக்கு அபராதம்

சேலம், ஜன.23- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனுநாளில் எண்ணற்ற பொதுமக்கள் மற்றும் அரசு அலுவ லர்கள் வருவது வழக்கம். போக்குவரத்து விதிகளை முறை யாக பின்பற்ற வேண்டிய அரசு ஊழியர்கள் பலர் தலைக்கவசம்  அணியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிறார்கள் என் கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில், முதன்முறையாக காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், தலைக்கவசம்  அணியாத அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அப ராதம் விதித்தனர். அப்போது, சில அரசு ஊழியர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உக்கடம் பேருந்து நிலைய கட்டிடங்கள் அகற்றும் பணி துவக்கம்

கோவை, ஜன.23- பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், உக்கடம் பேருந்து நிலையத்திலுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகள் திங்க ளன்று துவங்கியது. கோவை மாவட்டம், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 2.4 கிலோ மீட்டர்  தூரத்திற்கு ரூ.430 கோடியில் மேம்பா லம் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு  தொடங்கியது. இந்த மேம்பாலம் உக்க டம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே தொடங்கி கரும்புகடை வரை முதல் கட் டமாகவும், கரும்புக்கடை அருகே  தொடங்கி ஆத்துப்பாலம் வரை 2 ஆவது கட்டமாகவும் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட மேம்பால பணிகள் 90 சதவிகிதம் வரை முடிந்து விட்டது.  போக்குவரத்து வசதிக்காக உக்கடம் பேருந்து நிலையம் மாற்றி அமைக்கப் பட உள்ளது.  இந்நிலையில், உக்கடம் பேருந்து நிலைய கட்டிடத்தின் வெளிபுறம் செயல் பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட கடை களை திங்களன்று இடிக்கும் பணிகள்  துவங்கியது. மேலும், அந்த கட்டிடத் தின் பேருந்து நிலையம் உள்புறம் உள்ள  கேரள மாநிலம் செல்லும் பேருந்து  நிறுத்த பிளாக்குகளும் இடித்து அகற்றப் பட்டு வருகிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்துக்கு செல்லும் பேருந் துகள் அடுத்த பிளாக்கில் நிற்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப் பகுதியில் பொதுமக்கள் யாரும் வரக்கூ டாது என காவல் துறையினர் ஒலிப் பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

காட்டு யானை தாக்கி தோட்ட தொழிலாளி பலி

உதகை, ஜன.22- கூடலூரை அடுத்த ஓவேலி பேரூ ராட்சிக்கு உட்பட்ட டெல்ஹவுஸ் பகு தியில் சிவனாண்டி (62)  என்பவரை காட்டு யானை தாக்கியதில் பலி யானார்.  ஓவேலி பேரூராட்சி டெல்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சிவனாண்டி,  ஓய்வு பெற்ற தோட்ட தொழிலாளி யான இவர் குடும்பத்துடன் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்ப வத்தன்று விறகு எடுத்து வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். பல மணிநேரம் கடந்தும் வீட்டிற்கு வராத தால், குடும்பத்தினர் இவரை தேடிச் சென்றுள்ளனர். இந்நிலையில், அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் பத்தாம் நம்பர் பகுதியில் சிவனாண்டி  யானை தாக்கி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்த தகவ லறிந்த காவல்துறையினர் மற்றும்  வனச்சரகர்கள் சம்பவ இடத்திற்கு  வந்து உடலை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  முன்னதாக, வனத்துறை வாக னத்தில் உடலை ஏற்றிய நிலையில் அங்கு திரண்ட உறவினர்கள், சக  தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் உடலை எடுத்துச் செல்ல விடா மல் தடுத்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களுடன் கூடலூர் ஆர்டிஓ உதவி வன பாதுகாவலர், காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

காட்டு யானை களிடமிருந்து தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண் டும். குடியிருப்புகள், தேயிலை தோட் டங்கள், விவசாய நிலங்களுக்குள் வரும் காட்டு யானைகளை விரட்ட உறுதியான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறு தியளித்ததை அடுத்து உடலை எடுத் துச் செல்ல அனுமதித்தனர். இதனை அடுத்து உடல் கூடலூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட் டது. அத்துடன் இழப்பீட்டுத் தொகை யான ஐந்து லட்ச ரூபாயில் உடனடி உதவித்தொகையாக ரூபாய் 50,000 மற்றும் பாக்கி தொகை காசோலை யாக வழங்கப்பட்டது. இறந்த சிவனாண்டியின் மனைவி பெருமாயி தோட்டத்தில் நிரந்தர பணி யாளராக உள்ளார். மற்றும் சிவ குமார் (30) ராஜகுமார் (28) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். முன்ன தாக, சனியன்று உதகை வந்த தமிழ் நாடு வனத்துறை அமைச்சர் மா.மதி வேந்தவனிடம், குடியிருப்பு பகு திக்குள் நுழையும் காட்டுயானை களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தது குறிப் பிடத்தக்கது.

சாலை விபத்து: 45 பேர் படுகாயம்

தருமபுரி, ஜன.23- நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூரை அடுத்த ஈச்சம்பள் ளத்தை சேர்ந்த சுமார் 50க்கும்  மேற்பட்டோர், தனியார்  பேருந்தில் மேல்மலைய னூர் சென்றுவிட்டு,  ஊர் திரும்பினர். அப்போது, ஊத்தங்கரை அருகே எதிரே வந்த லாரி, தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் 45 பேர்  படுகாயம் அடைந்தனர். இதில், 16 பேர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ னையில் தீவிர சிகிச்சை பிரி வில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.

நீதிமன்றத்தில் திருவள்ளுவர் சிலை

உதகை, ஜன.23- அன்பாலயத்தின் அனைத்துலக அன்பர் அமைப்பு விடுத் துள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம், உதகை காக்கா  தோப்பு பகுதியில் மாவட்ட நீதிமன்றம் கட்டப்பட்டு மிக விரை வில் செயல்பட உள்ளது. நீதி துறை எப்படி இயங்க வேண்டும் என்பதையும், நீதி எவ்வாறு வழங்க வேண்டும் என்று 2 ஆயிர மாண்டு முன்பே வள்ளுவர் எழுதியுள்ளார். ஆகவே வள்ளு வரை நினைவு கூறும் வகையில், புதிதாக கட்டப்பட்டு செயல் பாட்டிற்கு வர உள்ள நீதிமன்ற வளாகத்தில் வள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  மேலும், இதுகுறித்த மனு முதல்வம் மற்றும் சட்டத்துறை  அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட காப்பகத்தில் பொருட்கள் திருட்டு?

திருப்பூர், ஜன.23- அவிநாசி தாலுகா, திருமுருகன் பூண்டியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவேகானந்த சேவாலயா குழந்தை கள் காப்பகத்தில் ரூ.10 லட்சம் மதிப் புள்ள பொருட்கள் திருட்டுப் போயிருப் பதாக அதன் நிர்வாகி புகார் கூறியுள் ளார். திருப்பூர் - அவிநாசி சாலை, திருமு ருகன் பூண்டியில் விவேகானந்த சேவா லயம் என்ற குழந்தைகள் காப்பகம்  செயல்பட்டு வந்தது. இங்கு தங்கியி ருந்த சுமார் 15 சிறார்கள் கெட்டுப் போன  உணவை உட்கொண்டதால், கடந்த அக் டோபர் 5ஆம் தேதி இரவு உடல் நிலை  பாதிக்கப்பட்டு மூன்று பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர். அமைச்சர்கள், அதிகாரி கள் உடனடியாக அங்கு சென்று ஆய்வு  மேற்கொண்டதில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் காப்பகம் செயல்பட்டது தெரிய வந்தது. மேலும்  நிர்வாகிகள் அலட்சியம் காரணமா கவே குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட் டதும் தெரிந்தது. இதையடுத்து பாதிக் கப்பட்ட மற்ற 11 சிறார்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். பின்னர் அவர்கள் ஈரோட்டில் உள்ள அரசு  காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து விவேகானந்த சேவாலயம் பூட்டப்பட்டதுடன், அதன் நிர்வாகி செந்தில்நாதன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே  வந்த காப்பக உரிமையாளர் செந்தில் நாதன் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட் சியர் எஸ்.வினீத்-திடம் மனு அளித்தார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், மூன்று  குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எங்களது காப்பகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நானும் சிறையில் அடைக்கப்பட்டேன். தற்பொழுது ஜாமீ னில் வெளியே வந்துள்ள சூழலில்,  கடந்த டிசம்பர் 15ஆம் தேதி, காப்ப கத்தை பார்வையிட வேண்டும் என அதி காரிகள் கூறினர்.

அவர்களுடன் காப்ப கத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது  காப்பகத்தின் உள்ளே வைக்கப்பட்டி ருந்த தொலைகாட்சி, 10க்கும் மேற்பட்ட   சிலைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும். இதுதொடர்பாக அவிநாசி வட்டாட் சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மேலும் இந்த திருட்டு தொடர்பாக ஒருவரை பிடித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை  திருடப்பட்ட பொருட்கள் எதையும் போலீசார் எங் களிடம் ஒப்படைக்கப்படவில்லை, அது மட்டுமின்றி காப்பகத்தின் பின்புறம் உள்ள நுழைவாயில் கேட் உடைக்கப் பட்டு அதன் வழியாக சமூக விரோதிகள்  உள்ளே வந்து இந்த திருட்டுச் செயலில்  ஈடுபட்டுள்ளார்கள். எனவே பின்புற  கேட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும் காப்பகத்திற்கு சீல்  வைத்த சில நாட்கள் மட்டுமே போலீசார்  பாதுகாப்பில் இருந்தனர்.  தற்பொழுது போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடவில்லை இத னால் காப்பகத்திற்குள் சமூக விரோ திகள் சுலபமாக வந்து செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:48.72/60அடி நீர்வரத்து:816கன அடி
வெளியேற்றம்:79கன அடி

அமராவதி அணை நீர்மட்டம்:78.74/90அடி.நீர்வரத்து:34கனஅடி
வெளியேற்றம்:469கனஅடி

ஜன. 27ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஜன. 27ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருப்பூர், ஜன.23- திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க் கூட்டம் வரும்  27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20இல் மாவட்ட  ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறுகிறது என்று  மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

ஈரோடு, ஜன.23– ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவ ணமின்றி ரூ50 ஆயிரத்திற்கும்மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என அறி வித்துள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி  27 ஆம்  தேதி  இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல்  நடத்தை  விதிமுறை கள்  அமலுக்கு  வந்துள்ள நிலையில், தொகுதி யில் உரிய ஆவணம் இன்றி  ரூ.50  ஆயிரத் துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறி முதல் செய்யப்படும் என்பது விதி. அதன்படி பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா கும்பலுக்கு உடந்தை: போலீஸ் எஸ்ஐ கைது

கோவை, ஜன.23- கஞ்சா விற்பனை கும்பலுக்கு உடந் தையாக இருந்ததாக காவல் உதவி  ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரத்தினபுரி, சங்கனூர் பகு தியில் கஞ்சா விற்ற சந்திராபாபு (33)  என்பவர் கைது செய்யப்பட்டார்.  அவ ரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது. மேலும் அவரது கூட்டாளிகள் ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகே சன், பாண்டி ஆகியோரும் கைதானார் கள். இவர்கள் நீண்டகாலமாக கஞ் சாவை கல்லூரி மாணவர்கள், வாலி பர்கள் உள்ளிட்ட பலருக்கு விற்பனை  செய்து வந்துள்ளனர். கைதானவர்களி டம் நடத்தப்பட்ட விசாரணையில் பல் வேறு தகவல்கள் கிடைத்தன.  இதில், ஈரோடு மாவட்டம் சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேந்திரன் (35)  என்பவர்தான் இந்த கஞ்சா கும்பலுக்கு பின்னணியில் செயல்பட்டு வந்ததும், கஞ்சா கும்பல் பிடிபடாமல் இருக்க மாமூல் வசூலித்து வந்ததும் தெரிய வந்தது. உதவி ஆய்வாளர் மகேந்தி ரன், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020  ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் கோவை போதை பொருள் தடுப்பு நுண் ணறிவு பிரிவில் உதவி ஆய்வாளராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது  கஞ்சா கும்பலிடம் இருந்து மாமூல் வசூ லித்து கஞ்சாவை புழக்கத்தில் விட உடந்தையாக செயல்பட்டுள்ளார். இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

மகளின் தற்கொலைக்கு பாஜக பிரமுகரே காரணம்

காவல் ஆணையரிடம் தாய் பரபரப்பு புகார்

சேலம், ஜன.23-  எனது மகள் இறப்பிற்கு காரண மான பாஜக பிரமுகர் மீது நடவ டிக்கை எடுத்து உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட  பெண் ஒருவர் சேலம் காவல் ஆணை யர் அலுவலகத்தில்  புகார் அளித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. மேலும், இவ்விவகாரத்தில், காவல் துறையும் உடந்தையாக இருப் பதாக குற்றம்சாட்டியுள்ளார். சேலம், சின்ன கொல்லப்பட்டி பகு தியைச் சேர்ந்த சிவகாமி என்பவர் திங்களன்று மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் அளித்துள் ளார்.  இதுகுறித்து சிவகாமி கூறுகை யில், சேலம் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் ஸ்ரீதேவி மாயா அருட் கோட்டம் டிரஸ்ட் என்ற பெயரில் ஜீவ சமாதி வழிபாட்டுத் தளம் நடத்தி வரு கிறோம். எனது மகள் சுகன்யாவை கோரிமேடு பகுதியை சேர்ந்த பாஜக  பிரமுகர் மெய்யப்பன் என்பவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திரு மணம் செய்து கொடுத்தோம். திரு மணம் ஆன பிறகு எனது மகளை சொத்து பிரச்சனை காரணமாக அடிக் கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். ரூ.5 கோடி மதிப்பிலான  சொத்தை தனது பெயருக்கு மாற்றி தர வேண் டும் என்றும் எனது மகளை மிரட்டி உள்ளார் இதனால், மன வேதனை அடைந்த எனது மகள் சுகன்யா தற் கொலை செய்து கொண்டார். தற்கொ லைக்கு காரணமான எனது மகளின்  கணவரும் பாஜக பிரமுகருமான மெய்யப்பன் அவரது அப்பா நடரா ஜர், தாயார் லட்சுமி, அவரது அக்கா  நளினி ஆகியோர் மீது புகார் அளித் தும், எந்தவித நடவடிக்கையும் காவல் துறையினர் எடுக்கவில்லை. மாறாக  அவர்களுக்கு சாதகமாக செயல் பட்டு   வழக்கை முடித்து வைத்தனர். தற்போது என்னையும் எனது மகனை யும் சொத்து பிரச்சனையில் மிரட்டி வருகிறார். எனவே எனது மகளின் தற்கொலை  வழக்கை மீண்டும் விசாரணை செய்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எனது மகனுக்கும் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்து வரும் பாஜக பிரமுகர் மீது குற்றவியல் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்தார்.

இன்று கண் பரிசோதனை முகாம்

தருமபுரி, ஜன.23- வத்தல்மலையில் செவ் வாயன்று இலவச கண் பரி சோதனை முகாம் (இன்று) செவ்வாயன்று நடைபெற உள்ளது என மாவட்ட சுகா தாரப் பணிகள் துணை இயக் குநர் எஸ்.சௌண்டம்மாள் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவினையொட்டி, மலைவாழ் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகை யில், அரசு ஆரம்ப சுகாதார  நிலைய வளாகத்தில் இம்மு காம்கள்  நடைபெறுகிறது.

வேலை வாங்கி தருவதாக பணமோசடி நடப்பாண்டில் மட்டும் 23 பேர் புகார்

உதகை, ஜன.23- நீலகிரி மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி,  கடந்த 3 வாரத்தில் மட்டும் 20 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா தலை தூக்கியபோது, பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதால் பல்வேறு நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகமாகி யது. இதனால் பலரும் வேலை இழந்து விட்டு புதிய வேலைக் காக காத்திருந்தனர். மேலும், ஆன்லைன் மூலமாக விண் ணப்பித்து வருகின்றனர். இதில் இளைஞர்களை குறி வைத்து  பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மூலம் வேலை வாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதை நம்பி குறுஞ்செய்தியில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு பேசினால், வேலை வாங்கி தருவதாக கூறி குறிப் பிட்ட வங்கி கணக்கு எண்ணை கொடுத்து அதில் ஆயிரக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை யில் ரூ.5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கி  கணக்கில் பணம் செலுத்தினால், மறுபடியும் தொடர்பு கொண்டு  கூடுதல் பணம் செலுத்தமாறு கூறுகின்றனர். ஆனால், வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விடுகின்றனர்.

இந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு தொடங்கி யது முதல் ஜன.20 ஆம் தேதி வரை 23 பேரிடம் சுமார் ரூ.4 லட்சம் வரை பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீ சாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையி னர் கூறுகையில், வேலை வாங்கித் தருவது, கேஒய்சி அப்டேட் உட்பட பல்வேறு காரணங்களை கூறி சமீப காலமாக இளை ஞர்களை ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. தற்போது வட இந்தியாவில் இருப்பவர்கள் அங்கு வறுமையில் இருப்ப வர்களின், ஆவணங்களை வாங்கி அவர்கள் பெயரில் வங்கி  கணக்கு தொடங்கி அதற்கு மோசடி ஆசாமிகள் தங்களது இமெயில் ஐடி, மற்றும் செல்போன் எண்ணை கொடுத்து  விடுகின்றனர். இதன்பின் அந்த வங்கி கணக்கை பயன்படுத்தி  வேலை வாங்கி தருவதாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநி லங்களில் இருப்பவரிடம் பணத்தை ஏமாற்றி வாங்கி விடு கின்றனர். அந்த வங்கிக்கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றி இறுதியாக தங்களது சொந்த கணக்குக்கு பணத்தை மாற்றுகின்றனர். ஒருவேளை காவல் துறையினர் வங்கி கணக்கை தொடர்பு கொண்டு, அவர்களை கைது செய்ய முயன்றால் அப் பாவிகள் தான் மாட்டுகின்றனர். எனவே, வேலை வாங்கித்  தருவதாகக்கூறி பணம் கேட்டால் ஏமாறாமல் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். 100க்கும் மேற்பட்டோரிடம் இதுபோல் ஏமாற்றி இருக்கலாம். தற்போது வரை 23 பேர் புகார் அளித்துள்ளதாக, அதிர்ச்சி பட தெரிவித்துள்ளனர்.