ஓலா நிறுவனத்தின் அடாவடி நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ்
நாமக்கல், பிப். 17- ஓலா நிறுவனம் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண் டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதில் வழங்க வும் வழக்கு தாக்கல் செய்தவரின் வாகனத்தை இயக்க அனுமதிக்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல்லில் ஜி.சுதேஸ்வரன் (27) என்பவர், நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஓலா மற்றும் பிளிப் கார்ட் நிறுவனங்களின் மீது வழக்கு தாக்கல் செய்துள் ளார். அதில், பிளிப்கார்ட் இணையதளத்தில் ஓலா எலக் ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை விளம்பரத்தை பார்த்து, கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் மாத இறுதியில் ரூ 87,548/- ஐ சுதேஸ்வரன் செலுத்தியுள்ளார். வாடிக்கையாளரின் வீட்டிலேயே வாகனம் டெலிவரி செய்யப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், 2024 அக்டோபர் முதல் வாரத்தில், ஓலா ஷோரூமில் பெற்றுக் கொள்ளுமாறும், மேலும், தாங்கள் சொல்லும் இன்சூரன்ஸ் நிறுவனத் தில்தான் பணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தித்து பணத்தை வசூல் செய்துள்ளனர். வாகனத்தை ஒப்ப டைக்க நிறைவேற்ற கட்டணமாக (fulfilment) ரூ 4,280/- வழங்க வேண்டும் என அதனையும் வசூலித்துள்ளார் கள். பின்னர், இரண்டு மாதங்கள் வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சுதேஸ்வரனை அழைத்த ஷோரும் நிர்வாகிகள், மானிய தொகை பெறுவதற்கு நேரில் வந்து புகைப்படம் எடுத்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிபந்தனை எதுவும் வாகனத்தை வாங்கும் போது தெரிவிக்கப்படவில்லை என்று கூறிய நிலையில், சென் சார் கட்டுப்பாடு மூலம் வண்டியை லாக் செய்துள்ளனர். இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான சுதேஷ்வரன், ஓலா நிறுவனத்தின் நேர்மையற்ற வணிக நடைமுறையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிர மங்களுக்கு ரூ5,00,000/- இழப்பீடும், தம்மை போல பாதிக் கப்பட்ட அடையாளம் தெரியாதவர்களுக்கு சென்று சேர ரூ.100 கோடிஓலா நிறுவனம் வழங்க வேண்டும் என புகா ரில் தெரிவித்திருந்தார்.
இருளர் மக்கள் ஆட்சியரிடம் மனு
தருமபுரி, பிப். 17- பட்டா கேட்டு இருளர் இன மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள சங்கிலிநத்தம், ஈச் சம்பள்ளம், அத்திமரத்துபள்ளம், எர்ரகுட்டஹள்ளி ஆகிய கிராமங்களில், 29 இருளர் இனத்தை சேர்ந்த குடும்பங்களும், 220 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த, 99 ஆண்டுக ளாக வசித்து வருகிறோம். மேற்படி, கிராமத்தில் உள்ள மேட்டு நிலத்தில், விவசாயம் செய்து வருகிறோம். கடந்த, 2007 ஜூலை, 16 அன்று கிருஷ்ணகிரி வன நிர்ணய அலு வலரால் வழங்கப்பட்ட ஆணைப்படி, இதுவரை எங்க ளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நிலப்பட்ட உட்பட எது வும் வழங்கப்படவில்லை. எனவே, மிகவும் ஏழ்மை யான நிலையில் எங்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
நாமக்கல், பிப். 17 – நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக் களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை வளாகப் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார் மூன்று பேர் மட்டுமே மனு அளிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இதனிடையே, வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு கூட்டம் இருப்பதை காரில் செல்லும் போது, கவனித்த நாமக்கல் ஆட்சியர் மருத்துவர் உமா வாக னத்தை நிறுத்தி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந் தார். அப்போது அங்கு குவிந்திருந்த பெண்கள் தங்கள் பகுதி யில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த சில மாதங் களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், முறையான குடிநீர் வசதி இல்லை எனவும், ஊராட்சியை மாநகராட்சிக ளோடு இணைக்க கூடாது எனவும் பல்வேறு தரப்பினர் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். இதுகுறித்து அரசிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் உறுதி அளித்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கும் படி கூறிச் சென்றார். இதனையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் இருந்து நடந்தே சென்று மற்றொரு பகுதி யில் அமைந்திருந்த பொது மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
திருப்பூர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நிபுணர் குழு: கே.சுப்பராயன் எம்.பி., கோரிக்கை
திருப்பூர், பிப். 17 - திருப்பூரில் அதிகரிக்கும் கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நிபு ணர் குழு அமைத்து அவர்களின் பரிந்து ரையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் கூறினார். திருப்பூரில் திங்களன்று கே.சுப்பராயன் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதா வது: தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை கொடுக்க முடி யாது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் வழங்குவோம் என அவர் மாநிலத்திற்கு எதிராக போர் பிரகடனம் செய்திருக்கிறார். தமிழ்நாடு இதைச் சந்தித்து முறியடிக்கும். ஒரேயொரு கார்டூன் போட்டதற்காக விக டன் இணையப் பக்கத்தை முடக்கியுள்ளது ஒன்றிய அரசு. சட்டவிரோதமாக குடியேறிய வர்கள் என்று மூன்று விமானங்களில் இந்தி யர்களை அநாகரிகமான முறையில் நாடு கடத்தியிருக்கிறார்கள். அதைப் பற்றி டிரம்பி டம் நேரில் பேசும் போது கூட கண்டிக்கத் துணி வில்லாத மோடி பிரதமர் பதவியில் இருக்கத் தகுதியற்றவர். கை விலங்கிட்டது தவறு என்று சொல்ல மோடி மறுப்பது வெட்கக் கேடு. அஞ்சி நடுங்கும் அவருக்கு டிரம்பிடம் பேசத் தைரியமில்லை. கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பு ஈரோடு மாவட்டம் பர்கூர், கடம்பூர் மலைக ளில் வசிக்கக்கூடிய மலையாளிகள் என்ற பட் டியலின பழங்குடி மக்களுக்கு உரிய சான்றி தழ் வழங்கப்படவில்லை. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது. இது குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் திருப் பூர் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதி களை நிறைவேற்றித் தர ஏற்றுமதி வருமானத் தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்க வேண் டும் என கோரிக்கை வைத்தோம். அதை ஒன் றிய அரசு நிராகரித்து விட்டது. பட்டாவுக்கு சாதகமான முடிவு கடந்த 15ஆம் தேதி திஸா கூட்டத்தில் திருப்பூர் அண்ணா காலனியில் கலைஞர் காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சிலருக்குப் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. வேறு சிலர் உள்வாடகைக்குக் குடியிருக்கின்றனர். அவர்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும். பெரிச்சிபாளையம் மாநகராட்சி சுகாதார ஊழியர் குடியிருப்பில் 55 ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருக்கும் 135க்கும் மேற்பட் டோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண் டும். பட்டுக்கோட்டையார் நகரில் ஒரு பகுதியி னருக்கு பட்டா கொடுக்கப்படாமல் உள் ளது. அவர்களுக்குப் பட்டா வழங்க வேண் டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத் தேன். சாதகமாக முடிவு செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். நிபுணர் குழு தேவை திருப்பூர் நகரில் போக்குவரத்து நெருக்க டிக்குத் தீர்வு காண நிபுணர் குழு அமைத்து அவர்கள் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் ரோடு வீரபாண்டி பிரி வில் இருந்து அவிநாசி ரோடு அம்மாபாளை யம் வரை மேம்பாலம் அமைத்து, வழியில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆங்காங்கே இணைப்புச் சாலை அமைக்க வேண்டும். பல் வேறு பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடு வோர் திருப்பூரில் வந்து பதுங்கிக் கொள்கின் றனர். இந்த முக்கிய பிரச்சனையில் காவல்து றையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி, குற்றவாளி களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண் டும். கஞ்சா, போதைப் பழக்கம் மிகப்பெரும ளவு இளைய தலைமுறையினரை குட்டி ச்சுவர் ஆக்குகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் எம்.ரவி, மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி., புறநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.இசாக், மாநகர துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
அவிநாசி – கோவை புதிய வழித்தடம் ஏற்படுத்தி கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
அவிநாசி, பிப்.17 - அவிநாசியில் இருந்து கோவைக்கு தனி யாக புதிய வழித்தடப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று திங்களன்று சமூக அலுவ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திங்களன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பேருந்துகளை ஆய்வு செய்தனர். இதில் கல்லூரி மாணவ, மாணவி கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பேருந் துக்காக 4 மணி நேரம் காத்திருந்து அவதிப்படு கின்றனர். எனவே காலை 6 மணி முதல் 9 மணி வரை அவிநாசியில் இருந்து கோவைக்கு கூடு தலாக புதிய பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அவிநாசி வழியாக செல்லும் பெரும்பாலான பேருந்துகள் தெக்கலூர், கரு மத்தம்பட்டி, நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லா மல் போவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவிநாசியில் இருந்து மேற்கண்ட ஊர்களில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் புதிய வழித்தடம் உரு வாக்கப்பட்டு கோவைக்கு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையத்தில் நேர கண் காணிப்பாளர் பெரும்பாலான நேரம் இருப்ப தில்லை. அவர் அங்கிருப்பதை உறுதிப்ப டுத்த வேண்டும். அதேபோல அவிநாசி நக ருக்குள்ளே வராமல் பைபாஸ் பாலம் வழி யாக செல்லும் ஈரோடு, திருப்பூர், சேலம் வழித் தடப் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்திற்குள் வருகின்ற பேருந்துகளை, அரசு பேருந்து பதிவேடுகளில் பதிவு செய்வதில்லை. அதை முறையாக பதிவு செய்ய வேண்டும். மேலும் காலை நேரங்களில் புதிய பேருந்து நிலைய காவல் நிலையத்தில் காவலர்கள் இருப்ப தில்லை, போக்குவரத்து நெருக்கடிகளை சீர் செய்ய காவலர்கள் செயல்பட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தி டம் முன்வைத்துள்ளனர். மேலும் ஒரு வாரத் தில் பல தரப்பினரை ஒன்றிணைந்து போராட் டத்தை முன்னெடுப்பதாக சமூக ஆர்வலர் கள் தெரிவித்துள்ளனர்.
சௌடாம்பிகை நகரில் வாலிபர் சங்க விளையாட்டு விழா
அவிநாசி, பிப்.17 – அவிநாசி அருகே பொன்ராமபுரம், சௌடாம்பிகை நகர் வாலிபர் சங்கக் கிளை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி, வஞ்சிபாளையம் அருகே பொன்ராமபுரம், சௌடாம்பிகை நகர் வாலிபர் சங்கக் கிளைகள் சார்பில் விளை யாட்டு விழா ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல் கட்ட நிகழ்வாக வாலிபர் சங்கக் கொடியை கிளைத் தலைவர் ஆசிரியர் அருள் ஏற்றி வைத்தார். கிளைச் செயலா ளர் டெலின் முன்னிலையில் சிறுவருக்கான ஓட்டப் பந்தயத்தை வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட விளை யாட்டு விழா கன்வீனர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத் தார். இந்நிகழ்வில் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஹனிபா, கிளை நிர்வாகிகள் தினேஷ், சதீஷ், ஜீவா, சக்தி வேல், சுர்ஜித், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் எம்.சந்திரன், ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
பாதாள சாக்கடைப் பணிகளுக்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு
கோவை, பிப்.17- பாதாள சாக்கடைப் பணிகளுக்கு தோண் டப்பட்ட குழியில் மண் சரிந்து இளைஞர் உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டம், மருதமலை ஐ.ஓ.பி காலனி வீரகேரளம் சாலையில் பாதாள சாக் கடைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக் கிறது. இப்பணியானது எல்&டி நிறுவனம் ஒப்பந்த முறையில் மற்றொரு நிறுவனத் திற்கு பணிகள் செய்ய கொடுத்து இருக் கிறது. இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் (20) என்ற இளைஞர் பணி யாற்றி வந்தார் அப்பொழுது எதிர்பாராத வித மாக அவர் மீது மண் சரிந்து விழுந்து மண் ணில் புதைந்தார். இது குறித்து அங்கு பணி யாற்றியவர்கள் வடவள்ளி காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையின ருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இளை ஞரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்த னர். ஆனால் அந்த இளைஞர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வடவள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி
உதகை, பிப்.17- அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை பலரிடம் பல லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக் கப்பட்ட மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். உதகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு கிரி மற்றும் விஜயா ஆகிய இருவர் எல்க் ஹில் மற்றும் பிஷப் டவுன் ஆகிய பகுதி களைச் சேர்ந்த பலரிடம் தங்கள் குழந்தைகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மனோ என்ற நபரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அரசு வாகனத்தில் வந்த மனோ என்ற நபர் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளின் படித்த சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆவணங்களை பெற்று உள்ளார். ஒரு வாரத்திற்கு பின் ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் என பலரி டம் பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு 21 நாட்களுக்குள் அரசு வேலை என உத்தரவாதம் அளித்து, வேலை வாய்ப்புக்கான ஆவணங் களை பெற்றோர்களிடம் கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் 21 நாட்கள் கழித்து யாருக் கும் வேலை கிடைக்காமல், பணம் செலுத்திய நபர்களுக்கு எந்த ஒரு பதி லும் வழங்காமலும் பணத்தைப் பெற் றுக் கொண்டு போலி ஆவணங்களை வழங்கிச் சென்ற பின்பு தெரியவந் துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், பணமோசடியில் ஈடுபட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பணத்தை திரும்ப பெற்றுத் தரகோரி யும் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.
குந்தா: நீர் வெளியேற்றம்
உதகை, பிப்.17- நீலகிரி மாவட்டம், உதகை அருகே காட்டு குப்பையில் குந்தா நீரேற்று மின் திட்டப் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகி றது. 60 சதவீத பணிகள் நிறை வடைந்த நிலையில், குறிப் பிட்ட இரு அணைகளில் தண் ணீர் வெளியேற்றினால் தான் அடுத்த கட்டப் பணி மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள் ளது. இதையடுத்து, 160 அடி வரை தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டது. கடந்த நவ.10 ஆம் தேதியன்று முதல் தண்ணீர் வெளியேற் றப்பட்டது. ஆரம்பத்தில், வினாடிக்கு 1000 அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக வினா டிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகி றது. மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இது வரை 150 அடி வரை தண்ணீர் வெளி யேற்றப்பட்டது. வெளியேற் றப்படும் தண்ணீரால் பில் லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தேவைக்கேற்ப தண்ணீர் நிரம்பி கோவை மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோ கிக்க முடிகிறது.