districts

img

சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் ஊழல்: அதானியை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ.28- சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் லஞ் ச ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியை கைது  செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திருப்பூர் புதிய பேருந்து நிலையம்,  வேலம்பாளையம், மங்கலம், கருவம்பாளை யம் ஆகிய பகுதிகளில் வியாழனன்று கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம்,  இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி, அதானி குழுமத்தின் காற்றாலை மின்சக்தி  திட்டத்தை செயல்படுத்த அன்றைய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜப க்ஷவிற்கு அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச் சாட்டு. தற்போது இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறு வதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம்  வழங்கி, அமெரிக்காவிலும், உலக நாடுக ளில் இருந்தும் முதலீடுகளைப் பெற முயற்சி  செய்தது. சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து, ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன் றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு அழைப்பு விடுத்தி ருந்தது. அதன்படி திருப்பூர் புதிய பேருந்து  நிலையம், வேலம்பாளையம், மங்கலம், கரு வம்பாளையம் ஆகிய பகுதிகளில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம்:  திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக் குழு மற்றும் வடக்கு மாநகரக் குழு  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இப்போராட்டத்திற்கு வடக்கு ஒன்றியச்  செயலாளர் ஆர்.காளியப்பன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி  ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில்,  வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரா ஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.கணேசன், ஜி.சம்பத், வை.ஆனந்தன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். வேலம்பாளையம்:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்  குழு உறுப்பினர் என்.விஸ்வநாதன் தலைமை  வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச்செயலாளர் ச.நந்தகோ பால், மாவட்டக்குழு உறுப்பினர் சம்சீர் அக மத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நகரக்குழு உறுப்பினர் த.நாகரா ஜன், பி.சின்னச்சாமி, பி.பாபு உள்ளிட்ட பலர்  பக்கேற்றனர். முடிவில் நகரக்குழு உறுப்பி னர் அ.கிருஷ்ணவேனி நன்றி கூறினார். மங்கலம்: அதானியை கைது செய்யக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு  ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் கே.வேலுச்சாமி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பி னர் சி.மூர்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளர் செ.மணிகண்டன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கே.கணேசன், பி.லட்சுமி, ஒன்றியக்  குழு உறுப்பினர் எஸ்.சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பலர் பங்கேற்றனர். கருவம்பாளையம்: கருவம்பாளையம் தாடிக்கார முக்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருப்பூர் தெற்கு நகரக்குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக்குழு உறுப் பினர் பா.ஞானசேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகரச் செயலாளர் த.ஜெயபால், மாவட் டக் குழு உறுப்பினர் ஏ.ஷகிலா ஆகியோர்  கண்டன உரையாற்றினர். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ் ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்த ரம், மாநகரக் குழு உறுப்பினர்கள் பானுமதி,  ஜி.சுரேஷ், குமார், ஏ.செல்லமுத்து, ஜி.கல்கி ராஜ், ஜி.செந்தில்குமார், நா.சஞ்சீவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.