districts

img

விபத்துகளுக்கு வழிவகுக்கும் நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கை

உடுமலை, நவ.9- உடுமலை - மூணாறு சாலையில்  விபத்துகளை தடுக்கக்கோரி பொது மக்கள் கோரிக்கை வைத்து வந்ததை தொடர்ந்து, தடுப்புகள் அமைக்கும்  பணி நடைபெற்றது. இந்நிலையில் ஒரு இடத்தில் தடுப்பு அமைக்கப்படாமல் உள்ளது ஏன்? உடுமலை நெடுஞ் சாலை துறை தனியாருக்கு சாதகமாக செயல்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.  உடுமலை மூணார் சாலை செங்கு ளம் பகுதியில் தொடர் விபத்துகள் ஏற் பட்டு வந்தது. இதை தடுக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.  இதையடுத்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து சாலை விரிவாக்கப் பணிகள்  தொடங்கியது. மேலும், உடுமலை திருப் பதி கோவில் முதல் சுடலை ஆண்டவர்  கோவில் வரை சாலையை அகலப்ப டுத்தி, வாகனங்கள் ஒருபுறமாக செல் லும் வகையில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், உடு மலை நெடுஞ்சாலைத்துறையினர் உடு மலை திருப்பதி கோவிலுக்கு செல் லும் வகையில் சாலை தடுப்புகளை அமைக்காமல், சிறப்பு வழி ஏற்படுத்தி  உள்ளார்கள். மக்களுக்கு பாதிப்பு ஏற்ப டாமல் முறையாக செய்ய வேண்டிய வேலையை, தனியாருக்கு சாதகமாக உடுமலை நெடுஞ்சாலை துறை அதிகா ரிகள் செய்வது ஏன் என தெரியவில்லை  என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலை மூணார் சாலை யில் போக்குவரத்து அதிகமாக இருக் கும். இச்சாலையில், பள்ளி வாகனங் கள், தனியார் வாகனங்கள் என ஆயிரக் கணக்கான வாகனங்கள் தினசரி சென்று  வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற் பட்டு வந்தது. இதையடுத்து, தொடர்  விபத்துகளை தடுக்கும் வகையில் போடிபட்டி ஊராட்சி பெரியகுளம் பிரிவு  பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து ரவுண்டான அமைக்கப்பட்டது. அதேபோல் செங்குளம் பகுதியில் இருக்கும் சாலை வளைவுகளை சரி  செய்து, விபத்து ஏற்படுவதை தடுக்கும்  வகையில், ஒரு வழிச்சாலையாக வாக னங்கள் செல்லும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டது. இப்பணிக்காக இப் பகுதியில் இருந்த 40 க்கும் மேற்பட்ட பழ மையான மரங்களை அகற்றப்பட்டது. இந்நிலையில் உடுமலை திருப்பதி கோவிலுக்கு வழிவிடும் வகையில் தடுப்பு அமைக்காமல் உள்ளனர். அதே  சாலையில் வணிக நிறுவனம் உட்பட பழ மையான கோயில்கள் உள்ளன. இங்கு  வழிவிடப்படவில்லை. ஆனால் ஒரு  தரப்பினருக்கு மட்டும் சிறப்பு வழி ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற் காக பல மரங்களை வெட்டி, அரசு சார் பில் பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி சாலை களை சீரமைத்து தடுப்பு அமைக்கப்பட் டதோ, அந்த நோக்கம் தற்போது நிறை வேறவில்லை. மீண்டும் விபத்துகள்  ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முறை யாக திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றால், போராட்டம் நடத்துவோம் என்றனர். இதுகுறித்து உடுமலை உதவி  கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத் துறை ராம்வேலிடம் கேட்ட போது விபத் துகளை தடுக்கும் வகையில் சாலை விரி வாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதன்ஒருபகுதியாக செங்குளம் பகுதி யில் வாகனங்கள் ஒரு வழியாக செல் லும் வகையில் சிமெண்ட் தடுப்புகள்  வைத்து வருகிறோம். விபத்துகளை  தடுக்கும் வகையில் வேலைகள் நடை பெறுகிறது. புகார் தெரிவித்த இடத்தை  உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப் படும், என்றார்.