குடியரசு தினம்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
நாமக்கல், ஜன.28- குடியரசு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் விடுமுறை அளிக்காததால் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழிலாளர் துறை ஆணையாளர் அதுல் ஆனந்த், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் சசிகலா ஆகியோர் உத்தரவின் பேரில், நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருநந்தன் மேற்பார்வையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய மற்றும் விடுமுறை தினமான ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், பேக்கரிகளை ஆய்வு செய்ததில் 37 நிறுவனங் களும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 6 மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 88 நிறு வனங்களில் ஆய்வு செய்ததில் 60 நிறுவனங்களில் பணிபு ரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடு முறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலா ளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க அனுமதி பெறாமலும் இருந்தது தெரிய வந்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தொழிலாளர் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்துகளை தடுத்திடுக
கோவை, ஜன.28- கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, ஒடையக்கு ளம், சேத்துமடை, வேட் டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக அம்ப ராம்பாளையம் சுங்கத்திலி ருந்து செல்லும் சாலை அமைந்துள்ளது. சாலை யோரம் மின்விளக்குகள் மிகவும் குறைவாக இருப்ப தால் இருள் சூழ்ந்து உள் ளது. சில இடங்களில் ஆபத் தான வளைவுகள், வேகக் கட்டுப்பாட்டு தகவல் இல்லா மல் இருப்பதால் இரவு நேர த்தில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. உடனடியாக இந்த விபத்து களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
துப்பாக்கி வைத்திருந்த வடமாநில இளைஞர்கள் கைது
பள்ளிபாளையம், ஜன.28- பள்ளிபாளையம் அடுத்துள்ள, வால்ராசம்பாளையம் பகு தியில் துப்பாக்கி வைத்திருந்ததாக வடமாநில இளைஞர் கள் கைது செய்யப்பட்டனர். வால்ராசம்பளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, இரண்டு இளைஞர்கள் வட மாநிலத்திலிருந்து வந்து வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் தினந் தோறும் அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் வரவே, அரு கில் இருந்தவர்கள் வெப்படை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் அவர்கள் வீட்டில் சோதனை செய்தனர். வீட்டில் இருந்த ஒரு பெட்டியின் உள்ளே, ஒரு ரிவால்வர் துப்பாக்கி மற்றும் எட்டு தோட்டாக் கள் இருந்தது. இதில் அந்த இரண்டு இளைஞர்கள் பீகார் மாநி லத்தைச் சேர்ந்த மனிஷ் குமார் (26), ஜார்கண்ட் மாநி லத்தைச் சேர்ந்த சாகர் (19) என தெரியவந்தது. இதனைய டுத்து, அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக் களை பறிமுதல் செய்து அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், துப் பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் பெறவில்லை என்பதும், முறைகேடாக துப்பாக்கியை வைத்துள்ளதும் தெரியவந்துள் ளது. இச்சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சைனீஸ் காய்கறிகள் விளைச்சல் குறைந்தது
உதகை, ஜன.28- உதகையில், பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிக மாவதால் சைனீஸ் காய்கறி கள் விளைச்சல் குறைந்து உள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்று வட் டாரப் பகுதிகளில் பிரதான தொழிலாக தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது. மலைக்காய் கறிகள் சரியான விலைகள் கிடைப்பதில்லை என பெரும் பான்மையான விவசாயிகள் சைனீஸ் காய்கறிகளான ஐஸ்பிரிக், லிக்ஸ், செல்லறி போன்ற பல வகையான காய்கறிகள் விளைவிக்கும் பணியை செய்து வருகின்ற னர். இதில் அவர்களுக்கு எந்தவித நட்டம் எற்படுவது இல்லை. இதனால் பெரும் மக்கள் சைனீஸ் காய்கறி களை விளைவித்து வருகின் றனர். தற்போது பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிக மாவதால் சைனீஸ் காய்கறி விளைச்சல் குறைந்து உள்ளது. குறிப்பிட்ட நேரத் தில் காய்கறிகளை விற்ப னைக்கு கொடுக்க முடி யாமல் வருத்தம் அடைந்த மடைந்து வருகின்றனர்.
வால்பாறையில் பனி மூட்டம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கோவை, ஜன. 28- கோவை வால்பாறையில், சனியன்று பனிமூட்டமும், பனிபொழிவும் அதிக அளவில் காணப்பட்டதால் வால்பாறை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறையில் உள்ள புதுதோட்டம், ஸ்டாண்மோர் பகுதியில் சனியன்று காலை முதலே பனி மூட்டமும், பனி பொழிவும் அதிக அளவில் இருந்தது. இதனால், தேயிலைச் செடிகள் கருகும் நிலையில் உள்ளது. தேயிலை உற்பத்தி குறைவாக இருப்பதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை, வருவாய் இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் உள் ளிட்ட பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு உள்ளது. தற்போது வால்பாறை பகுதியில் அதே நிலைமை உள்ளது. வால்பாறை பகுதியில் பனி மூட்டம் காரணமாக வால்பாறை -பொள்ளாச்சி சாலையில் அதிக பனிமூட்டத்தால் பேருந்து கள், கனரக வாகனங்கள் பகலிலேயே முகப்பு விளக்கு களை ஒளிரவிட்டு மெதுவாகவே சென்றனர். தேயிலை உற்பத்திக்கு அடுத்தபடியாக வால்பாறையில் சுற்றுலா பெரிதும் வருவாயை ஈட்டித்தருகிற நிலையில், கடும் பனி மூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது. இதனால் வியாபார நிறுவனங்கள், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
சாலை விபத்துகளை தடுத்திடுக
கோவை, ஜன.28- கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, ஒடையக்கு ளம், சேத்துமடை, வேட் டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக அம்ப ராம்பாளையம் சுங்கத்திலி ருந்து செல்லும் சாலை அமைந்துள்ளது. சாலை யோரம் மின்விளக்குகள் மிகவும் குறைவாக இருப்ப தால் இருள் சூழ்ந்து உள் ளது. சில இடங்களில் ஆபத் தான வளைவுகள், வேகக் கட்டுப்பாட்டு தகவல் இல்லா மல் இருப்பதால் இரவு நேர த்தில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. உடனடியாக இந்த விபத்து களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
2 ஆயிரத்து 250 கிலோ நெல் விதைகள் விற்க தடை
தாராபுரம், ஜன. 28- தாராபுரம் பகுதியில், ஈரோடு விதை ஆய்வு துணை இயக் குநர் நடத்திய ஆய்வில் முறையாக பராமரிக்கப்படாத 2 ஆயி ரத்து 250 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்யத் தடை விதித்தார். தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் நெல் விதை குடோன் கள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் பெ.சுமதி ஆய்வு செய்தார். அப்போது விற்பனை உரிமம், இருப்பு மற்றும் விலை விபர பலகை, கொள்முதல் பட்டியல், பதிவேடுகள், பதிவுச்சான்றிதழ், முளைப்பு திறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை குறித்தும், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன் களையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில விற்பனை நிலையங்களில் விதை இருப்பிற்கும், பதிவேடு இருப்பிற்கும் வேறுபாடு இருந்ததையடுத்து ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரத்து 250 கிலோ அளவிலான விதை நெல்லைகளை விற் பனை செய்ய தடை விதித்தார். மேலும் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணை உரிமை யாளர்கள் மீது விதை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள் ளப்படும். விவசாயிகளுக்குப் பட்டத்திற்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்யவேண்டும். விதிமீறல்கள் கண்டறி யப்படும்பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினி யோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்ச ரித்தார். ஆய்வின் போது தாராபுரம் மற்றும் காங்கேயம் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
அமராவதி ஆற்று நீர் மாசு படுவதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
உடுமலை ஜன.28- அமராவதி ஆற்றின் கரையோரத்தில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டுவதால் ஏற்படும் சுகாதார சீர் கேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக் கள் கோரிக்கை வைத்துள்ளனர். மடத்துக்குளம் பகுதியில் உள்ள பல கிராமங்களின் குடிநீர் தேவைகளையும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங் களுக்கு நீர் ஆதாரமாகவும் உள்ளது. அமராவதி ஆற்றின் கரையோ ரத்தில், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டுவ தால் ஆற்றின் நீர் மாசுபடுகிறது. மேலும் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. ஏற்கனவே இந்த ஆற்றின் கரையோரங்களில் அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் பேப்பர் மில் கழிவுகளுடன், இது போன்ற கழிவுகளையும் அகற்ற சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்ப குதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஜன.31க்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்
தாராபுரம், ஜன. 28- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன.31 கடைசி நாள் என்பதால் உடனடியாக இணைக்க மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மின்வாரிய செயற்பொ றியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, தாராபுரம் மின்பகிர்மான கோட்டத்தில் உள்ள 20 மின் வாரிய அலுவலகங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளது. மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்க ளது ஆதார் எண்ணைப் பெற்று வருகின்றனர். எனவே அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண் மற்றும் பிற விபரங்களை மின் பணியாளர்களிடம் தெரிவிக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஜனவரி 31 வரை ஆதாரை இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் அளித்துள்ளது. மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் தங்க ளது ஆதார் இணைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:52.84/60அடி நீர்வரத்து:762கன அடி வெளியேற்றம்:920கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:76.45/90அடி.நீர்வரத்து:149கனஅடி வெளியேற்றம்:869கனஅடி
கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காண சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை
அவிநாசி, ஜன. 28 – அவிநாசி ஒன்றியம் கணியாம்பூண்டி கழி வுநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவி நாசி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன் சிலர் பி.முத்துசாமி வலியுறுத்தினார். அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட் டம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய ஆணையர் விஜயகு மார் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் முத்து சாமி பேசுகையில், கணியாம்பூண்டி பகுதி யில் நீண்ட காலமாக தனியாருக்கு சொந்த மான நிலத்தில் கழிவுநீர் விடப்பட்டு வந்தது. இதை அந்த இடத்தின் உரிமையாளர் தடுத்து விட்டார். இதையடுத்து ஊராட்சி ஊழியர், சாலையில் வெட்டி அங்கு சென்ற கழிவுநீரை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டார். சாலையில் கழிவுநீரை கொண்டு செல்வதை நிறுத்தி, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அந்த ஊழியரிடம் கூறிய போது, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்தான் கழிவுநீர் பாதையை மாற்றினார்கள் என்று தெரிவித்தார். எனவே கணியாம்பூண்டி கழி வுநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று முத்துசாமி கேட்டுக் கொண் டார். அதேபோல புதுப்பாளையம் ஊராட்சி மதுரா நகர் பகுதியில் சாலை, சாக்கடை மற் றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண் டும், சாமிநகர் பகுதியில் பிரதான சாலையை சீரமைத்து தர வேண்டும். வஞ்சிபாளையம் பள்ளி எதிரே திருப்பூர் செல்லும் சாலை யில் தண்ணீர் குழாய் பதிப்பதற்காக தோண் டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என் றும் முத்துசாமி கூறினார்.
தவறான செய்தி பரப்பிய விவகாரம்: இரு தனிப்படைகள் அமைப்பு
திருப்பூர், ஜன. 28 - திருப்பூரில் புலம் பெயர்ந்த தொழிலாளர் கள் தமிழக தொழிலாளர்களை விரட்டிச் சென்று தாக்கியதாக தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பிய விவகாரம் தொடர்பாக இரு தனிப்படைகள் அமைக்கப் பட்டு இருப்பதாக மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறினார். சனிக்கிழமை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு இது தொடர்பாக கூறி யதாவது: திருப்பூர் மாநகரில் தமிழர்களை வட மாநில தொழிலாளர்கள் தாக்கியதாக தவ றான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் டீ குடிக்க சென்றபோது ஏற்பட்ட பிரச்சனையில் யாருக்கும் காயமோ, பாதிப்போ இல்லை. இதனை இன்று நடைபெற்றது போல தவறாக சித்தரித்து பரப்பி உள்ளனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களை கண் காணித்து வருகிறோம். இப்பிரச்சனையில் விசாரணை மேற்கொள்ள இரண்டு தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தனிப்படை, சம்பவம் நடைபெற்றதில் ஈடு பட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மற்றொரு தனிப் படை சமூக வலைதளங்களில் தவறாக தக வல் பதிவிட்டவர்கள் குறித்து விசாரித்து வரு கின்றனர் என்று கூறினார்.
இலவசத் திட்டங்களை செயல்படுத்தும் ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
திருப்பூர், ஜன. 28 - தமிழ்நாடு அரசின் இலவச திட்டங்களை செயல்படுத்தக்கூடிய நியாய விலை கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.5 வீதம் ஊக்கத்தொகை வழங்குமாறு சிஐ டியு கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) நிர்வாக குழு கூட்டம் வியா ழக்கிழமை திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவ லகத்தில் மாவட்டத் தலைவர் பி. கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில், நியாய விலைக் கடைகளில் பிஎச்எச் குடும்ப அட்டைகளுக்கு இரண்டு முறை பில் போடுவதை தவிர்த்து பி.ஓ.எஸ் இயந்தி ரத்தில் ஒரே முறையில் பில் போடும் முறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு சரியான முறையிலும், முழுமையாக ஒதுக்கீடு அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அரசின் இலவச திட்டங்களை செயல்படுத்தும் நியாய விலை கடை பணியா ளர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூபாய் 5 வீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.மகேந்திரன், மாவட்ட பொருளாளர் பி. சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர் வி.கருப் புசாமி, துணைச் செயலாளர் பி.முருகன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மோசடி அறிக்கை: தாசில்தார் மீது புகார்
திருப்பூர், ஜன. 28 - கல்குவாரி, கிரசர், எம் சாண்ட் ஆலைகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் வீடுகள் இல்லை என பொய்யான தகவல் அடிப்படையில் மோசடியான அறிக்கை கொடுத்த காங்கே யம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். காங்கேயம் வட்டம், நால்ரோடு கிராமத்தில், சிவா ப்ளூ மெட்டல், தார் பிளாண்ட்டு, எம்.சாண்ட் ஆலை ஆகியவற் றுக்கு மோசடியான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொடுத்த காங்கேயம் வட்டாட்சியர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். என்று தமிழ்நாடு சுற்றுசூழல் பாது காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், விவசாயிகள் சிவன்மலை சிவசாமி, சதீஷ்குமார் உள்ளிட்டோர் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூறினர்.
உடுமலையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
உடுமலை, ஜன.28- உடுமலை நீர் நிலைக ளில் பறவைகள் கணக்கெ டுக்கும் பணியை வனத் துறை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து தொடங்கியுள்ள னர். தமிழ்நாட்டில் ஒருங்கி ணைந்த பறவைகள் கணக் கெடுப்பானது ஏரிகள் மற் றும் குளங்களில் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெ றுகிறது. ஆனைமலை புலி கள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரி சல்குளம், ஒட்டு குளம், பெரி யகுளம், செங்குளம், ராய குளம், தேன் குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங் குளம், சேவூர் குளம், செம் மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம் ஆகிய குளங்களில் இந்த பறவைகள் கணக் கெடுப்பு நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறு வனம் குழு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங் கேற்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு எதிராக செயல்படுவதா?
தருமபுரி, ஜன.28- மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு எதிராக செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்டசெயலாளர் எம்.மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கி முழு சம்பளம் வழங்ககோரி வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து பிடிஒ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக செயல் படும் பிஜேபி அரசை கண்டித்து ஜூலை 10ஆம் தேதியன்று தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் தருமபுரி மாவட் டத்தில் இருந்து பெருமளவில் பங்கேற்பது என முடிவு செய் யப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனைப்பட்டா கேட்டு மார்ச் 7ஆம் தேதி தருமபுரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும், மார்ச் 14ஆம் தேதியன்று அரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் செண்பக வள்ளி அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு விரோதமாக செயல்படுகிறார். குறிப்பாக காதொலிகருவி, தவளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு செல்போன் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை உரிய பயனாளிக்கு வழங்காமல் புரோக்கர் மூலம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை நடக்காமல் பார்த்துகொள்கிறார். இப்படி தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு விரோதமாக செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் செண்பகவள்ளியை கண்டித்தும் இவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தோடர் இனத்தவரின் பொள்சி திருவிழா
உதகை, ஜன.28- உதகை அருகே 10 ஆண்டுகளுக்கு பின்னர் தோடர் இன மக்கள் பாரம்பரிய திருவிழா வெள்ளியன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், கோத்தர், குறும்பர், பனியர், காட்டுநாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பழங்குடியின மக்களின் திருவிழா விமரிசையாக கொண்டாடுவர். இதன்தொடர்ச்சி யாக, உதகை அருகே தாரநாடு மந்து பகுதியை சேர்ந்த தோடர் இன மக்களின் பாரம்பரிய கோவில் சோலூர் அருகே ஓல்கோடு மந்தில் உள்ளது. ஆவுல் என்ற புல் மற்றும் பெரம்பு ஆகியவற்றை கொண்டு அமைக்கப்பட்டு உள்ள இந்த கோவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு விழா நடத்தபட்டு வருகிறது. அதற்காக 30 நாட்கள் விரதம் இருந்த தோடர் இன ஆண்கள் அப்பர்பவானி பகுதிக்கு சென்று ஆவுல் என்ற புற்களையும், மசினகுடிக்கு சென்று பெரம்பு, மூங்கில் போன்றவற்றையும் எடுத்து வந்து கோவிலின் கூறையை மாற்றி புதுப்பித்து வந்தனர். பணிகள் முடிந்த நிலையில் பொள்சி என்று அழைக்கப்படும் திருவிழா வெள்ளியன்று நடைபெற்றது. இதையொட்டி தோடர் இன ஆண்கள் தங்களது பாரம் பரிய உடை அணிந்து வந்து பிறை வடிவிலான கோவிலின் முன்பு மண்டியிட்டு வணங்கினர். கோவில் வாயிலின் முன் புறத்தில் பாரம்பரிய நடனத்தை மூத்த தோடர் இன ஆண்கள் ஆடினர்.
பயிர்களை சேதப்படுத்திய யானைகள் வனத்துறையினர் மெத்தனம்
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
தருமபுரி, ஜன.28- தருமபுரி அருகே விவசாய பயிர்களை யானைகள் சேதப் படுத்துகிறபோது, வனத்துறையினர் மெத்தனமாக நடந்து கொள்ளுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், பங்கேற்று விவசாயிகள் பேசுகையில், தருமபுரி மாவட் டத்தில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு வட்ட வனப்பகுதி களில் ஒட்டியுள்ள விளை நிலங்களில் யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றது. குறிப்பாக சோமன்அள்ளி பகுதி யில் கடந்த நான்கு நாட்களாக யானைகள் விவசாய நிலத்தில் சுற்றி திரிகிறது. விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், ஆழ்துளை கிணற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நட்டம் ஏற்படடுள்ளது. யானைகளை வனத்திற்குள் விரட்ட வனத்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், யானைகளால் சேதப்படுத்தி பயிர்கள் மற்றும் பொருட் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என் றனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங் களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டது. பாதிப்பு குறித்து நிவாரணத்திற்கு விவசாயிகள் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்றனர். இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தோட்டக்கலை துணை இயக்குநர் மாலினி மற்றும் இதர அனைத்துத் துறை அலுவலர்களும், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவ சாயிகள் கலந்து கொண்டனர்.