உதகை, ஜூலை 23– நீலகிரியில் அபாயகரமான மரங்களை அகற்ற உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்த நாளிலிருந்து குறிப்பாக, உதகை, குந்தா, கூடலுார், பந்தலுார், குன் னுார் பகுதிகளில், 140 பெரிய அளவி லான மரங்கள் விழுந்து பாதிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது. போர்க் கால அடிப்படையில் மரங்கள் அகற் றப்பட்டன. ஆனாலும், மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான அபாயகரமான மரங் கள் எந்நேரத்திலும் விழும் நிலை யில் உள்ளது. இதனாலேயே பொது மக்கள் பருவமழை சமயத்தில் அச் சத்துடனே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அபாயகரமான மரங் களை அகற்ற வேண்டும் என, மக் களின் கோரிக்கைகள் பரிசீலிக்கக் பட்டு அகற்றப்பட்டாலும், இன்னும் ஏராளமான அபாயகரமான அந் நிய மரங்கள் உள்ளன. அபாயகர மான மரங்கள் அகற்ற கோரி பொது மக்களிடம் இருந்து தொடர்ந்து மனுக் கள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடியிருப்பு அருகா மையிலும், சாலையோரங்களிலும் உள்ள அபாயகரமான மரங்களால் குடியிருப்பு வாசிகள், வாகன ஓட்டி கள் அச்சத்துடன் காணப்படுகின்ற னர். பருவ மழை சமயத்தில் மிகுந்த அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், செவ்வாயன்று அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்திலும் அபாயகர மான மரங்கள் அகற்றுவது குறித்து விவாதித்துள்ளனர். தொடர்ந்து, செய்தியாளர்களி டம் ஆ.ராசா கூறுகையில், பருவ மழையில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. உடனுக்குடன் அகற் றப்பட்டது. அபாயகரமான மரங் கள் மாவட்ட நிர்வாகத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனுக்கு டன் அகற்றப்பட்டு வருகிறது. அபா யகரமான மரங்களை அகற்ற அந் தந்த பகுதியில் உள்ள வன அலுவ லர்கள் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. அபாயகரமான மரங்கள் குறித்து மாவட்ட நிர்வா கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.