சேலம், மார்ச் 17- பணியிடத்தில் அவமரியாதை செய்யும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி ஓமலூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உத்தரவுப்படி 100 நாட்கள் வேலையும், 4 மணி நேரம் வேலை நேரம் மற் றும் அரசு அறிவித்த கூலி வழங்க வேண்டும். மாநில சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை அமலாக்கி, மாற் றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்க மறுக்கும் அதி காரி மற்றும் பணிப்பொறுப்பாளர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு தொகுப்பு வீடு மற்றும் பசுமை வீடு வழங்க வேண்டும். பணியிடத்தில் அவமரியாதை செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஓமலூ ரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் அமலாராணி தலைமை ஏற் றார். இதில், மாவட்ட செயலாளர் எம்.குணசேகரன், மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகி எம்.கனக ராஜ் உள்ளிட்ட திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.