districts

img

கே.வி.தாமஸ் மீது நடவடிக்கை: உயர் ஆணையத்தில் குழப்பம்

புதுதில்லி, ஏப். 9- சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொள்வதாக அறிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உயர்மட்ட தலைமையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கேபிசிசி தலைவர் கே.சுதாகரன் உள்ளிட்ட கேரள தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அக் கட்சியின் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். இந்த நடவடிக்கை தேசிய அளவில் பின்னடைவை ஏற் படுத்தக்கூடும் என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சி கூட்டணிக்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அது மோசமான செய்தி யாக அமையும் என, அவர்கள் உயர் மட்ட தலைமைக்கு தெரிவித்தனர். சுதாகரனின் வற்புறுத்தலே பிரச்சனை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தேசிய நில வரத்தை கருத்தில் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்கிற நிலைப்பாட்டில் சோனியா காந்தியும் உள்ளார். கேபிசிசி முடிவு செய்யட்டும்: கே.சி.வேணுகோபால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஊடகங்களு க்கு அளித்த பதிலிலும் இந்த விவ காரத்தில் ஏற்பட்ட குழப்பம் வெளிப் பட்டது. கே.வி.தாமஸ் மீது நட வடிக்கை எடுப்பது குறித்து கேபிசிசி தலைமை முடிவு எடுக்க வேண்டும் என்றார். மாநில தலைமை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது ஏஐசிசி நடவடிக்கை எடுக்கும் என்றார். சிபிஎம் மாநாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.வி.தாமஸ் மீது கேபிசிசி உரிய  நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விசயத்தில் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அதை ஏற்க வேண்டிய பொறுப்பு தாமஸுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.